செய்திகள் :

"யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு செய்தேன்" - சிவகங்கை இளைஞர் கைது; கூட்டாளிகளுக்கு வலைவீச்சு

post image

சிவகங்கை மாவட்டத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த குற்றத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சாதி ரீதியான மோதல்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் வகையில் சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் ரோந்து சென்று தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள்.

அந்த கண்காணிப்பின் ஒரு பகுதியாகச் சிவகங்கை தாலுகா போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ தலைமையில் காவலர்கள் ரோந்து சென்றபோது ஓட்டக்குளம் கண்மாய்க்கரை புதரில் மறைவாக ஒரு இளைஞர் இருப்பதைக் கண்டனர்.

குற்றம் கைது - கருமுட்டை விற்பனை

அருகில் சென்று பார்த்தபோது அங்கு வெடி மருந்து, திரி, சணல், வயர் போன்ற பொருட்களுடன் இருந்த இளைஞரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரித்தபோது, கீழக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான மகேஸ்வரன், பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு எங்கேயும் செல்லாமல் ஊர்சுற்றி வந்துள்ளதும், இங்கு அமர்ந்து நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்து வந்ததும் தெரிய வந்தது.

நண்பர்கள் சந்தோஷகுமார், ரமேஷ்குமார், கர்லா ரமேஷ், சூர்யா ஆகியோருடன் யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு செய்ய கற்றுக் கொண்டதாக மகேஸ்வரன் தெரிவித்ததைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், அங்கிருந்த 4 நாட்டு வெடிகுண்டுகளுடன் வாள் ஒன்றையும் கைப்பற்றி, மகேஸ்வரனைக் கைது செய்தனர்.

நாட்டு வெடிகுண்டு (ஃபைல் படம்)

ஏற்கனவே பல்வேறு இடங்களில் வழக்குகள் உள்ள கூட்டாளிகள் நான்கு பேரையும் தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே வெடிகுண்டுகள் தயாரிக்க இவர்களுக்குப் பொருட்கள் எங்கிருந்து கிடைத்தது?, என்ன நோக்கத்திற்காக வெடிகுண்டுகள் தயாரித்தார்கள்?, இவர்களின் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்று தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88

திண்டுக்கல்: நிலத்தகராறில் 3 பேர் கொலையா? கிணற்றில் உடல்களைத் தேடிய போலீஸார்; நடந்தது என்ன?

திண்டுக்கல் அருகே அணைப்பட்டியில் இருதரப்புக்கும் இடையில் நிலப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.இதில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களின் உடல்கள் அணைப்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் வீச... மேலும் பார்க்க

சைபர் கிரிமினல்களிடம் ரூ.50 லட்சத்தை இழந்த வயதான தம்பதி தற்கொலை

இணையத்தளக் குற்றவாளிகள் பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடம் இருக்கும் பணத்தைப் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன. அதிகமானோர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ள... மேலும் பார்க்க

கிரிக்கெட்டர் முதல் ஐடி ஊழியர் வரை - உயர் ரக போதை பொருளால் கோவையை கலங்கடித்த நெட்வொர்க்!

கோவை மாவட்டத்தில் உயர் ரக போதை பொருள்கள் அதிகளவு பயன்படுத்துவதாக புகார் உள்ளது. இந்நலையில் ஆர்.எஸ்.புரம் சுற்று வட்டார பகுதிகளில் உயர் ரக போதை பொருள்கள் விற்பனை செய்யும் ஒரு நெட்வொர்க் குறித்து காவல்த... மேலும் பார்க்க

`கொலை செய்துவிட்டேன், சொல்லிவிடுங்கள்...' - மனைவியைக் கொன்று சூட்கேஸில் உடலை அடைத்த இன்ஜினீயர்

இந்தியாவில் பெங்களூரு சாஃப்ட்வேர் தலைநகரமாக விளங்குகிறது. இதனால் நாடு முழுவதும் இருந்து சாப்ட்வேர் இன்ஜினீயர்கள் பெங்களூரு வந்து வேலை செய்கின்றனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மும்பையை சேர்ந்த ராக... மேலும் பார்க்க

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கிய 70 வயது பாடகர்... ரூ.1.2 கோடியைப் பறித்த சைபர் கிரிமினல்கள்!

நாடு முழுவதும் அப்பாவி மக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடமிருந்து பணத்தை பறிக்கும் சம்பங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. மும்பை, ஐதராபாத் போன்ற நகரங்களில் இது போன்ற குற்றங்கள் அதிக அ... மேலும் பார்க்க

பெங்களூரு: ட்ராலியில் பெண்ணின் உடல் மீட்பு; போலீசாருக்கு போன் செய்த கணவர் கைது!

பெங்களூருவில் 32 வயதுடைய பெண் கௌரி அனில் சம்ப்ரேக்கர் உடலை ட்ராலியில் கண்டெடுத்துள்ளனர் பெங்களூரு போலீசார். தென்கிழக்கு பெங்களூருவை சேர்ந்தவர் ராகேஷ் ராஜேந்திர கெடேகர். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ப... மேலும் பார்க்க