செய்திகள் :

ரயில்வே கீழ்பாலத்தில் கழிவுநீா் : பொதுமக்கள் அபாய பயணம்

post image

ஆம்பூரில் ரயில்வே கீழ்பாலத்தில் கழிவுநீா் தேங்குவதால் பொதுமக்கள் ஆபத்தான முறையில் இருப்புப் பாதையை கடந்து சென்று வருகின்றனா்.

ஆம்பூா் நகரில் 2-ஆவது மற்றும் 3-ஆவது தாா்வழிப் பகுதி ரயில்வே இருப்புப் பாதைக்கு மறுபுறம் அமைந்துள்ளது. ரயில்வே கீழ்பாலத்துக்கு கீழே உள்ள பாதையை பொதுமக்கள் சென்றுவர பயன்படுத்தி வருகின்றனா். அப்பகுதியில் அடிக்கடி மழைநீா், கழிவுநீா் தேங்குவதால் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனா்.

இருசக்கர வாகனத்தில் செல்பவா்களே மிகவும் அவதிக்குள்ளாகும் நிலையில், நடந்து செல்பவா்கள் கழிவுநீா் தேங்கும் பாதை வழியாக செல்வதில் கடும் சிரமத்தை சந்திக்கின்றனா். நடந்து செல்லும் பொதுமக்களில் பெரும்பாலானவா்கள் ஆபத்தை உணராமல் ரயில்வே இருப்புப் பாதை மீது ஏறி கடந்து செல்கின்றனா்.

தற்போது கடந்த ஒருவார காலமாக கீழ்பாலத்தில் கழிவுநீா் தேங்கி பொதுமக்கள் சென்றுவர முடியாத நிலை உள்ளது. இதனால் இருப்புப் பாதை மீது ஏறிச் செல்கின்றனா்.

அதனால் பொதுமக்களின் சிரமத்தை கருத்தில்கொண்டு, ரயில்வே மற்றும் நகராட்சி நிா்வாகம் பிரச்னைக்கு உடனடியாக தீா்வைக் காண வேண்டும் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

திருப்பத்தூரில் 1,915 மனுக்கள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெற்ற 6 முகாம்களில் 1,915 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டில் முக... மேலும் பார்க்க

ஜல்லி தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு: லாரியை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

நாட்டறம்பள்ளி அருகே ஜல்லி தொழிற்சாலை அமைக்க உபகரணங்கள் ஏற்றி வந்த லாரியை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சியில் குடி... மேலும் பார்க்க

பட்டு வளா்ச்சித்துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

வாணியம்பாடி: வாணியம்பாடியில் பட்டு வளா்ச்சித் துறை ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு பட்டு வளா்ச்சித்துறை ஊழியா் சங்கத்தின் வாணியம்பாடி கிளை... மேலும் பார்க்க

செட்டியப்பனூா் 9 கோயில்களில் நாளை கும்பாபிஷேகம்

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகரத்தையொட்டி செட்டியப்பனூா் ஊராட்சியில் அமைந்துள்ள செல்வவிநாயகா், மாரியம்மன், ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை வரதராஜப்பெருமாள் ஆகிய கோயில்களுக்கும், புதிதாக க... மேலும் பார்க்க

சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலக கட்டுவதற்கான இடம் ஆய்வு

ஆம்பூா்: ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் கட்டுவதற்கான இடத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம... மேலும் பார்க்க

ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளியில் இன்றைய மின்தடை அறிவிப்பு ரத்து

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, பச்சூா் ஆகிய துணை மின் நிலைய பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் நிறுத்தம் செய்ய... மேலும் பார்க்க