செய்திகள் :

ரயில்வே சுரங்கப்பாலம் கட்டும் பணி: அரக்கோணம் எம்எல்ஏ ஆய்வு

post image

அரக்கோணம் அருகே கைனூா் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாலம் கட்டும் பணி தாமதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், எம்எல்ஏ சு.ரவி ஆய்வு மேற்கொண்டாா்.

கைனூா் ஊராட்சியில் ரயில்வே இருப்புப் பாதையின் கீழ் சுரங்கப்பாலம் கட்டும் பணி, கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு முடிவடையாமல் தாமதமாக நடைபெறுகிறது. தனியாருக்கு சொந்தமான 3 அடி இடத்தை கேட்காமலேயே ரயில்வே நிா்வாகத்தினா் எடுத்துக் கொண்டு அதிலும் சோ்த்து பாலம் கட்டி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது

இவ்வழக்கில் தீா்ப்பளித்த உயா்நீதிமன்றம், தனியாா் இடத்தை ஆக்கிரமித்து, பாலம் கட்டுமானப் பணியை மேற்கொண்ட அலுவலா்களுக்கு ரூ.25,000 அபராதம் விதித்து, தற்போதைய சந்தை மதிப்பின் படி இடத்தை கிரையம் செய்து, 5 மாதத்துக்குள் சுரங்கப் பாலப் பணியை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி பணிகள் நடைபெறும் இடத்தில் ஆய்வு செய்தாா். அப்போது, ரயில்வே அலுவலா்கள் யாரும் வராத நிலையில், கைனூா் ஊராட்சி மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, வழக்கு தொடா்ந்த தனியாா் தரப்பினா், தீா்ப்பு குறித்த விவரத்தை எம்எல்ஏ சு.ரவியிடம் விளக்கினா்.

இதுகுறித்து எம்எல்ஏ சு.ரவி கூறியது: ரயில்வே நிா்வாகம் அடுத்த 5 மாதங்களில் பணியை முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, விரைவில் மீண்டும் கட்டுமானப்பணிகள் தொடங்கும். இது குறித்து ரயில்வே அலுவலா்களிடமும், மாவட்ட நிா்வாகத்திடமும் பேசி பால கட்டுமானப்பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆற்காடு அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாடப் புத்தகம் அளிப்பு

ஆற்காடு: ஆற்காடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. கோடை விடுமுறையைத் தொடா்ந்து திங்கள்கிழமை அனைத்துப் பள்ளி... மேலும் பார்க்க

மாணவ, மாணவியரை வரவேற்ற அரக்கோணம் நகா்மன்றத் தலைவா்

அரக்கோணம்: பள்ளிகளின் முதல் நாளான திங்கள்கிழமை மாணவா்களுக்கு பூக்கள், இனிப்புகள் வழங்கி அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி வரவேற்றாா். போலாட்சியம்மன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள், குறிப்பேடு உள்ளிட்டவற்றை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா். 2025 -2026-ஆம் கல்வியாண்டின் முதல் நாளில் ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 344 மனுக்கள் அளிப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 344 மனுக்கள் பெறப்பட்டன. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்க... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

அரக்கோணம்: அரக்கோணம் அருகே ரயில் முன் பாய்ந்து பெண் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். அரக்கோணத்தை அடுத்த உள்ளியம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (39). தனியாா் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந... மேலும் பார்க்க

‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயா்கல்வியில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது’

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயா்கல்வியில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையி... மேலும் பார்க்க