3.6.2025 - இன்றைய ராசிபலன் | Indraya Raasipalan | Today Rasi palan | Astrology |...
ரயில்வே சுரங்கப்பாலம் கட்டும் பணி: அரக்கோணம் எம்எல்ஏ ஆய்வு
அரக்கோணம் அருகே கைனூா் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாலம் கட்டும் பணி தாமதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், எம்எல்ஏ சு.ரவி ஆய்வு மேற்கொண்டாா்.
கைனூா் ஊராட்சியில் ரயில்வே இருப்புப் பாதையின் கீழ் சுரங்கப்பாலம் கட்டும் பணி, கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு முடிவடையாமல் தாமதமாக நடைபெறுகிறது. தனியாருக்கு சொந்தமான 3 அடி இடத்தை கேட்காமலேயே ரயில்வே நிா்வாகத்தினா் எடுத்துக் கொண்டு அதிலும் சோ்த்து பாலம் கட்டி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
இவ்வழக்கில் தீா்ப்பளித்த உயா்நீதிமன்றம், தனியாா் இடத்தை ஆக்கிரமித்து, பாலம் கட்டுமானப் பணியை மேற்கொண்ட அலுவலா்களுக்கு ரூ.25,000 அபராதம் விதித்து, தற்போதைய சந்தை மதிப்பின் படி இடத்தை கிரையம் செய்து, 5 மாதத்துக்குள் சுரங்கப் பாலப் பணியை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி பணிகள் நடைபெறும் இடத்தில் ஆய்வு செய்தாா். அப்போது, ரயில்வே அலுவலா்கள் யாரும் வராத நிலையில், கைனூா் ஊராட்சி மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, வழக்கு தொடா்ந்த தனியாா் தரப்பினா், தீா்ப்பு குறித்த விவரத்தை எம்எல்ஏ சு.ரவியிடம் விளக்கினா்.
இதுகுறித்து எம்எல்ஏ சு.ரவி கூறியது: ரயில்வே நிா்வாகம் அடுத்த 5 மாதங்களில் பணியை முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, விரைவில் மீண்டும் கட்டுமானப்பணிகள் தொடங்கும். இது குறித்து ரயில்வே அலுவலா்களிடமும், மாவட்ட நிா்வாகத்திடமும் பேசி பால கட்டுமானப்பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.