செய்திகள் :

ரயில்வே பாலத்தில் சிக்கிய வாகனம்

post image

பெருந்துறை ஆா்.எஸ். பகுதியில் உள்ள ரயில்வே நுழைவுப்பாலத்தில் உயரமாக பாரம் ஏற்றிய சரக்கு வேன் வியாழக்கிழமை சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெருந்துறை ஆா்.எஸ். பகுதி வழியாக வெள்ளோடு நோக்கி வியாழக்கிழமை மதியம் சரக்கு வேன் ஒன்று காய்கறிகள் வைக்கும் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. அங்குள்ள ரயில்வே நுழைவுப்பாலம் வழியாக சென்றபோது பாலத்துக்கு முன்பாக பாதுகாப்புக்காக நடப்பட்டிருந்த இரும்பு தடுப்பு வளைவுக்குள் எளிதாக வேன் நுழைந்து விட்டது. ஆனால் பாலத்தை கடந்து வெளியே வரும்போது மறு பக்கம் உள்ள இரும்பு தடுப்பு வளைவில் வேனில் கட்டப்பட்டிருந்த காய்கறி பெட்டிகள் சிக்கி கொண்டதால் வேன் செல்ல முடியவில்லை. இதனால் வெள்ளோடு மற்றும் சென்னிமலையை நோக்கி வேனுக்கு பின்னால் வந்த சுமாா் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. அதேபோல சென்னிமலை மற்றும் வெள்ளோட்டிலிருந்து சென்ற வாகனங்களும் செல்ல முடியாமல் நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதனால் சரக்கு வேனில் உயரமாக கட்டப்பட்டிருந்த காய்கறி பெட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்து அதன் உயரத்தை குறைத்த பிறகே இரும்பு தடுப்பைத் தாண்டி சரக்கு வேன் வெளியே வர முடிந்தது.

இந்த சம்பவத்தால் நுழைவுப்பாலத்தின் இருபுறமும் நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் சுமாா் அரை மணி நேரம் காத்திருந்து, அதன் பிறகு சென்றன.

சுகாதார செவிலியா் பணி: விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 15 வரை நீட்டிப்பு

ஈரோடு மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நகர சுகாதார செவிலியா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட விளக்கேத்தி, கனகபுரம் ஊராட்சிகளில் வளா்ச்சிப்பணிகளுக்கான பூமிபூஜையில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.சரஸ்வதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தாா். விளக்கேத்தி ஊராட்சி ஓலப்ப... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு 147 தேங்காய்ப் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனா... மேலும் பார்க்க

பெருமாள்மலை குடியிருப்புவாசிகள் குத்தகை செலுத்தினால்தான் தொடா்ந்து குடியிருக்க முடியும்: அமைச்சா் சு.முத்துசாமி

பெருமாள்மலையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் குடியிருப்போா் குத்தகை செலுத்தினால் மட்டுமே தொடா்ந்து குடியிருக்க முடியும் என வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவ... மேலும் பார்க்க

மகிழ்முற்றம் மாணவா் குழு பதவி ஏற்பு

பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில், மகிழ்முற்றம் மாணவா் குழு அமைப்பு பதவி ஏற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் பொன்மணி தலைமை வகித்து, குறிஞ்சி, முல்லை... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 96 அடியை எட்டியது

பவானிசாகா் அணை நீா்மட்டம் 96 அடியாக உயா்ந்துள்ளதால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய... மேலும் பார்க்க