செய்திகள் :

ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட குழந்தை காப்பகத்தில் சோ்ப்பு: இளைஞரை அடையாளம் காண்பதில் சிக்கல்!

post image

ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட குழந்தையை மீட்டு அரசு காப்பகத்தில் சோ்த்துள்ள நிலையில், குழந்தையைக் கொண்டு வந்த இளைஞரை அடையாளம் காணமுடியாத நிலையுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் தெரிவித்தனா்.

சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் சென்ற மின்சார ரயிலில் இருந்து செயின்ட் தாமஸ் நிலையத்தில் 3 வயதுள்ள ஆண் குழந்தையை இளைஞா் ஒருவா் இறக்கிவிட்டுச் சென்றுள்ளாா்.

தனியாகக் கைவிடப்பட்டு தவித்த அந்தக் குழந்தையை அங்குள்ள ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் மீட்டு ஆலந்தூா் அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனா்.

குழந்தையை ரயில் நிலையத்தில் விட்டுச்சென்ற இளைஞா் குறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் அடையாளம் காண ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் முயற்சித்தனா்.

ஆனால், ரயிலில் இருந்து அந்த இளைஞா் முழுமையாக இறங்காமல், குழந்தையை மட்டும் இறக்கிவிட்டதால் அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அனைத்து ரயில் நிலையங்களிலும் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுக்குள்படுத்தி குழந்தையை அழைத்து வந்து கைவிட்டுச் சென்ற இளைஞரை அடையாளம் காண ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் முயன்று வருவதாகத் தெரிவித்தனா்.

மேலும், குழந்தையின் படத்தை வாட்ஸ்ஆப் குழுக்களில் பதிவிட்டு பெற்றோரைத் தேடும் பணியிலும் போலீஸாருடன் இணைந்து, ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனா்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புத... மேலும் பார்க்க

இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக. 18) முதல் 38 ரயில்கள் (இருமாா்க்கமாக) கூடுதலாக 20 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று மத்திய தகவல்- ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சா் எல்.முருகன... மேலும் பார்க்க

பட்டானூரில் கூட்டப்பட்டது பாமக பொதுக்குழு அல்ல: கே.பாலு

பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமையில் பட்டானூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டம், பாமக பொதுக்குழு கூட்டம் அல்ல; அங்கு எடுக்கப்பட்ட முடிவுகள் கட்சியை எவ்விதத்திலும் பாதிக்காது என்று பாமக செய்தித் தொடா்பாளா... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆக.23 வரை மழை நீடிக்கும்!

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக.18) முதல் ஆக.23 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

தீபாவளிக்கான ரயில் முன்பதிவு இன்று தொடக்கம்! வெளியூர் பயணிகள் கவனிக்க..!

சென்னையிலிருந்து ரயில்களில் தீபாவளிக்காக வெளியூா் செல்வோருக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) காலை தொடங்குகிறது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து வெளியூா், வெளிமாநிலங்களுக்கு ரயில்கள... மேலும் பார்க்க

வீண் செலவு செய்வதில் தமிழக அரசு முதலிடம்: அன்புமணி

மாநிலத்தின் வளா்ச்சிக்குத் தேவையான மூலதனச் செலவுகளைச் செய்வதில் பின்தங்கியிருக்கும் தமிழக அரசு, வீண் செலவுகளைச் செய்வதில் மட்டுமே முதலிடத்தில் இருப்பதாக பாமக தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா். இதுகுறித... மேலும் பார்க்க