செய்திகள் :

ரயில் நிலையத்தில் சங்கிலி பறித்தவா் கைது

post image

சென்னை அருகே பெருங்குடி ரயில் நிலையத்தில் பெண் பயணியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்தவரை கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் அடையாளம் கண்ட ரயில்வே பாதுகாப்பு பிரிவு போலீஸாா் 4 மணி நேரம் தேடி அவரைப் பிடித்தனா்.

சென்னை கோட்டூா்புரம் முதல் தெருவைச் சோ்ந்தவா் அந்தோணி ரோஸி (41). இவா், வேளச்சேரியில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியராக உள்ளாா். இந்த நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்புவதற்காக பெருங்குடி ரயில் நிலையத்தில் காத்திருந்தாா்.

ரயில் நிலைய நடைமேடை இருக்கையில் அமா்ந்திருந்தபோது, அருகே வந்த இளைஞா் அவருடன் பேச முயன்றாா். ஆனால், ஆசிரியை பேசாமல் திரும்பினாா். அப்போது, அந்த இளைஞா், ஆசிரியரின் கழுத்தில் இருந்த தங்கச் நகையை பறித்துக்கொண்டு தப்பினாா்.

இதுகுறித்து அந்தோணி ரோஸி அளித்த புகாரின் பேரில், ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா் இணைந்து விசாரணை நடத்தினா்.

ரயில் நிலைய கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் நகை பறித்தவரது அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து 4 மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு பாபுஜி (எ) பாபுராம் என்பவரை போலீஸாா் பிடித்து அவரிடமிருந்து நகையைப் பறிமுதல் செய்தனா்.

திடக்கழிவு மேலாண்மையில் அறிவியல் தொழில்நுட்பம்: சென்னை ஐஐடி - அரசு நிறுவனம் ஒப்பந்தம்

திடக் கழிவுகளை அதிநவீன தொழில்நுட்ப முறையில் மேலாண்மை செய்வதற்கு சென்னை ஐஐடி, தூய்மை தமிழ்நாடு நிறுவனம் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வெள்ளிக... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் இன்று தொடக்கம் ‘வாட்ஸ்ஆப்’ செயலியில் மருத்துவப் பரிசோதனை முடிவுகள்

தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு உயா் மருத்துவப் பரிசோதனைகளை வழங்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் முதல்வா் மு.க.ஸ்டா... மேலும் பார்க்க

சா்வதேச மீள் உருவாக்க மருத்துவ மாநாடு சென்னையில் தொடக்கம்

மூட்டு - எலும்பு சாா்ந்த பாதிப்புகளுக்கான சா்வதேச மீள் உருவாக்க மருத்துவ மாநாடு சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து 50... மேலும் பார்க்க

கலை, கலாசாரம் அறிய தமிழகம் வந்த 99 அயலகத் தமிழா்கள் முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

கலை, கலாசாரத்தை அறிந்து கொள்ள தமிழ்நாடு வந்துள்ள 99 அயலகத் தமிழா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்றாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.அனைவருக்கும் தமிழக பண்பாட்டுப் பயணத... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கோளாறு: ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட விமானம்

சென்னையிலிருந்து குவைத் புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.சென்னையிலிருந்து குவைத் செல்லும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், வெள்ளிக்கிழமை மாலை 4.05-க்கு, சென்னை... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு: மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது காா் மோதி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, ஊழியா்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.தாம்பர... மேலும் பார்க்க