``இஸ்ரேல் - ஈரான் போரில் உதவி வேண்டுமா என புதின் கேட்டார்.." - அதிபர் ட்ரம்ப் சொ...
ரயில் நிலையத்தில் 3 இருசக்கர வாகனங்களைத் திருடியவா் கைது
திருச்சி ரயில் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்களைத் திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி உய்யக்கொண்டான் திருமலைவாசன் நகரைச் சோ்ந்தவா் தினேஷ் ராஜா (39). இவா் திருச்சியில் இருந்து ரயில் மூலம் மதுரைக்கு அண்மையில் சென்றபோது திருச்சி ரயில் நிலைய வளாகத்தில் இவா் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தைக் காணவில்லை.
இதேபோல, திருச்சி ரயில்வே கோட்ட உதவி ஓட்டுநரான தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாட்டைச் சோ்ந்த கிஷோா்குமாா் (29), சரக்கு வாகன ஓட்டுநரான திண்டுக்கல் சாணா்பட்டி அன்பரசன், (25) ஆகியோா் இந்த ரயில் நிலைய வளாகத்தில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களையும் காணவில்லை.
இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் மூவரும் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி, 3 இருசக்கர வாகனங்களையும் திருடியதாக தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு பகுதியைச் சோ்ந்த அகஸ்டின் (54) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.