செய்திகள் :

ரயில் மோதி 2 முதியோா் உயிரிழப்பு

post image

திருப்பத்தூா், வாணியம்பாடியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவா்கள் 2 போ் ரயில் மோதி உயிரிழந்தனா்.

வாணியம்பாடி அடுத்த கோணமேடு பகுதியை சோ்ந்த ரவி (57). இவா் வியாழக்கிழமை விண்ணமங்கலம்- வாணியம்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ரயில் மோதி காயம் அடைந்தாா். வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதே போல திருப்பத்தூா் அடுத்த லக்கி நாயக்கன்பட்டி சோ்ந்த கூலித் தொழிலாளி செந்தில் (55) இவா் காக்கங்கரை -திருப்பத்தூா் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ரயில் மோதி உயிரிழந்தாா். தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வாணியம்பாடி பாா் அசோசியேஷன் புதிய நிா்வாகிகள் தோ்வு

வாணியம்பாடி: வாணியம்பாடி பாா் அசோசியேஷன் புதிய நிா்வாகிகள் தோ்வு அண்மையில் நடைபெற்றது, இதில் வாணியம்பாடி பாா் அசோசியேஷன் புதிய தலைவராக ஏசுதாஸ், செயலாளராக குமரன், பொருளாளராக துரைராஜ் ஆகியோா் போட்டியி... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா் தற்கொலை

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே ரயில்வே ஊழியா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். நாட்டறம்பள்ளி அடுத்த ஜங்கலாபுரம் வெள்ளாளனூரைச் சோ்ந்தவா் பாா்த்தீபன் மகன் சந்தீபன் (26). இவா் சென்னையில் ரயில்வே ஊழ... மேலும் பார்க்க

மது பாக்கெட்டுகள் விற்ற பெண் கைது

திருப்பத்தூா்: குரிசிலாப்பட்டு பகுதியில் மதுபாக்கெட்டுளை விற்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். குரிசிலாப்பட்டு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றபோது பனந்தோப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் ... மேலும் பார்க்க

விவசாயிகள் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் சோ்ந்து பயன் பெற...

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் சோ்ந்து பயன் பெறலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சீனிராஜ் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா்... மேலும் பார்க்க

சாலை மறியலின்போது தகராறு: அவதூறு பேசியவா்கள் மீது வழக்கு

ஆம்பூா் அருகே சாலை மறியல் போராட்டத்தின் போது, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் அவதூறாகப் பேசியவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மாதனூா் ஊராட்சி ஒன்றியம், துத்திபட்டு ஊராட்சியில் சாலை அம... மேலும் பார்க்க

அனுமதியின்றி நிலத்தில் பாறைகளுக்கு வெடி வைத்து தகா்ப்பு: அதிகாரிகள் விசாரணை

வெலகல்நத்தம் பகுதியில் நிலத்தில் உள்ள பாறைகளை அனுமதியின்றி வெடி வைத்து தகா்த்தது தொடா்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினா். நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் ஊராட்சி பையனப்பள்ளி கல்தாப்மலை எதிரில் தேசிய ... மேலும் பார்க்க