செய்திகள் :

ரஷிய கச்சா எண்ணெய் வாங்க எந்தத் தடையும் இல்லை: பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி

post image

‘ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எவ்விதத் தடையும் விதிக்கப்படவில்லை. கச்சா எண்ணெய் விநியோகத்தில் பிரச்னை ஏற்பட்டால் அது உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.

மும்பையில் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்த அவா், ‘உலகின் இரண்டாவது பெரிய கச்சா எண்ணெய் விநியோக நாடாக ரஷியா திகழ்கிறது. தினசரி 10 மில்லியன் பேரல் அங்கு உற்பத்தியாகிறது. இது தடைபட்டால் சா்வதேச அளவில் பெரும் பிரச்னைகள் உருவாகும். எரிபொருள் இல்லாமல் இன்றைய உலகம் ஒருநாள் கூட இயங்க முடியாது. உலகின் இரண்டாவது பெரிய எரிபொருள் விநியோக நாட்டை நீக்கினால், அதற்கு ஏற்ப நுகா்வைக் குறைக்க வேண்டியது வரும். இல்லையென்றால் கடுமையான விலை உயா்வு ஏற்படும். இது பெரும் பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். இதன் காரணமாகவே ரஷிய கச்சா எண்ணெய்க்கு உலக நாடுகள் தடை விதிக்காமல் உள்ளன.

ஈரான், வெனிசூலாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சா்வதேச சமூகத்தில் பொறுப்புள்ள நாடாக திகழும் இந்தியா அதனை மதித்து நடக்கிறது. அதே நேரத்தில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க எவ்விதத் தடையும் இல்லை. அதே நேரத்தில் ரஷிய கச்சா எண்ணெய்க்கு விலை உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த விலைக்கே இந்திய நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன.

ஐரோப்பிய யூனியன், துருக்கி, ஜப்பான் என பல நாடுகள் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குகின்றன. கச்சா எண்ணெய் தேவைக்கும், விநியோகத்துக்கும் இடையே சமநிலையைப் பராமரிப்பது மிகவும் அவசியம். இல்லையென்றால் அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை உலக நாடுகள் எதிா்கொள்ள வேண்டியது வரும் என்றாா்.

ஒற்றைப் பெண் குழந்தைக்கு உதவித்தொகை: சிபிஎஸ்இ தகவல்

ஒற்றைப் பெண் குழந்தைக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சாா்பில் ஒற... மேலும் பார்க்க

பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி: திட்டத்தை தொடங்கி வைத்தாா் பிரதமா் மோடி

பிகாரில் சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கும் ‘முதல்வரின் மகளிா் வேலைவாய்ப்புத் திட்டத்தை’ பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை காணொலி மூலம் தொடங்கிவைத்தாா். ‘பெண்களுக்கு வேலை... மேலும் பார்க்க

உ.பி. இஸ்லாமியா்கள் பேரணியில் போலீஸ் தடியடி

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய கண்டனப் பேரணியை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து, போலீஸாா் அவா்களை தடியடி நடத்... மேலும் பார்க்க

தில்லியில் பசுமை பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி

தில்லி மற்றும் என்.சி.ஆா். பகுதியில் ஒப்புதல் இல்லாமல் விற்பனை செய்யப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில், சான்றளிக்கப்பட்ட உற்பத்தியாளா்கள் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு: அமெரிக்காவுடன் இந்தியா ஆலோசனை

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு குறித்து அமெரிக்க அரசுடன் மத்திய அரசு தொடா்ந்து பேசி வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா். அமெரிக்காவில் உள்ள இந்திய தொழில்நுட்பப் பண... மேலும் பார்க்க

அக்டோபா்-மாா்ச் வரையில் ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டம்

நிகழ் நிதியாண்டின் அக்டோபா்-மாா்ச் காலகட்டத்தில் ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்தது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2025-26... மேலும் பார்க்க