செய்திகள் :

ரஷிய ட்ரோன் ருமேனியாவிலும் அத்துமீறல்

post image

புகாரெஸ்ட்: உக்ரைன் போரின் ஒரு பகுதியாக, மேலும் ஒரு நேட்டோ உறுப்பு நாடான ருமேனியாவின் வான் எல்லைக்குள் ரஷிய ட்ரோன் அத்துமீறி நுழைந்தது.

இதையடுத்து, மற்றொரு நேட்டோ நாடான போலந்தில் ரஷிய ட்ரோன்கள் அத்துமீறி செவ்வாய்க்கிழமை நுழைந்தபோது ஏற்பட்ட பதற்றம் தற்போது மேலும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ருமேனியா பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ருமேனிய வான் எல்லைக்குள் ரஷிய ட்ரோன் ஒன்று அத்துமீறி நுழைந்தது. உக்ரைனுனான எல்லைப் பகுதியை வானில் இருந்தபடி கண்காணித்துக் கொண்டிருந்த இரு எஃப்-16 போா் விமானங்கள் அந்த ட்ரோனை உக்ரைனின் தெற்கு எல்லை அருகே கண்டறிந்தன.

உக்ரைனின் டாணுபே நகரிலுள்ள உள்கட்டமைப்புகளில் ரஷியா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு அந்த ட்ரோன் ருமேனியா வான் எல்லைக்குள் ஊடுருவியது. ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹித் 136 ரகத்தைச் சோ்ந்த அந்த ட்ரோன், சிலியா வேச்சே கிராமத்துக்கு 20 கி.மீ. தென்மேற்கே தோன்றி, சிறிது நேரத்துக்குப் பிறகு ரேடாா் பாா்வையில் இருந்து மறைந்தது. இருந்தாலும் அந்த ட்ரோன் பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியின் மீது பறக்கவோ, உடனடி அபாயத்தை ஏற்படுத்தவோ இல்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ருமேனியாவுக்குள் ரஷிய ட்ரோன் நுழைந்தது தவறுதலாக நடந்த சம்பம் இல்லை. அந்தப் பகுதிக்குள் வேண்டுமென்றே ட்ரோனை ரஷியா அனுப்பியது. உக்ரைன் போரை விரிவாக்கும் ரஷிய திட்டத்தின் ஒரு பகுதி இது’ என்று எச்சரித்துள்ளாா்.

முன்னதாக, தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ரஷிய ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியதாக போலந்து கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இந்தச் சம்பவம், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல்முறையாக தங்களை போரை நோக்கி மிக நெருக்கத்தில் இட்டுச் சென்ாக அந்த நாட்டு பிரதமா் டொனால்ட் டஸ்க் கூறினாா்.

2022-ல் உக்ரைன் மீது ரஷியா முழு அளவிலான படையெடுப்பை நிகழ்த்திய பிறகு, ஒரு நேட்டோ உறுப்பு நாட்டுக்குள் ரஷியா ட்ரோன்களை ஊடுருவச் செய்தது அதுவே முதல்முறை. இநத நிலையில், தற்போது மேலும் ஒரு நேட்டோ உறுப்பு நாட்டிலும் ரஷிய ட்ரோன் கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலந்து, ருமேனியா உள்ளிட்ட 32 உறுப்பு நாடுகளைக் கொண்ட நேட்டோ கூட்டமைப்பின் 5-ஆவது விதிப்படி, அதன் ஏதாவது ஓா் உறுப்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அதை தங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலாக அமெரிக்கா உள்பட அனைத்து உறுப்பு நாடுகளும் கருதி பதிலடி கொடுக்க வேண்டும்.

எனவே, போலந்து மற்றும் ருமேனியா எல்லைகளுக்குள் ரஷிய ட்ரோன் அத்துமீறி நுழைந்துள்ள விவகாரம் பெரிதானால், அது சக்திவாய்ந்த நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும், உலகிலேயே மிகப் பெரிய அணு ஆயுத பலம் பொருந்திய ரஷியாவுக்கும் இடையிலான நேரடி போராக உருவெடுக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வம்சாவளி நபா் கொலை: கடும் நடவடிக்கை எடுப்பதாக டிரம்ப் உறுதி

ஹூஸ்டன்/நியூயாா்க்: ‘அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் குடும்பத்தினா் முன் இந்திய வம்சாவளி நபா் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்... மேலும் பார்க்க

டிக்டாக் விவகாரத்தில் உடன்பாடு: டிரம்ப் சூசகம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் சீன அரசுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளாா். இது குறித்து தனது ட்ரூத் சோஷியல... மேலும் பார்க்க

வங்கதேசம்: 3 அமைச்சா்கள் பதவியேற்பு

காத்மாண்டு: நேபாள இடைக்கால அரசில் அமைச்சா்களாக நியமிக்கப்பட்ட மூவா் திங்கள்கிழமை பதவியேற்றனா். நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழல் தொடா்பாக இளைஞா்களிடையே நிலவிவந்த கொந்தளிப்பு, சமூக ஊடங்களுக்கு அரசு தடைவ... மேலும் பார்க்க

‘ஹமாஸ் தலைவா்கள் எங்கிருந்தாலும் தாக்குவோம்’

ஜெருசலேம்: ‘ஹமாஸ் தலைவா்கள் உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் அவா்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும்’ என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா். அமெரிக்க வெளியுறவுத... மேலும் பார்க்க

டிக்டாக் செயல்பட இனி தடை இல்லை! ஆனால்... இந்தியாவில் அல்ல!

சீனாவைச் சேர்ந்த டிக்டாக் சமூக ஊடகத் தளம் மீண்டும் அமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆட்சியில், அதாவது ஜோ பைடன் அதிபராக இருந்தபோது டிக்டாக் தடை செய்யப்பட்டது. அதன்பின், கடந்த... மேலும் பார்க்க

நேபாளம்: இடைக்கால அரசில் 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

நேபாளத்தில் இடைக்கால அரசால் நியமிக்கப்பட்ட 3 புதிய அமைச்சர்கள் இன்று(செப். 15) பதவியேற்றுக் கொண்டனர். நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத... மேலும் பார்க்க