செய்திகள் :

ராகுலின் 55-ஆவது பிறந்த நாள்: பிரதமா், தலைவா்கள் வாழ்த்து

post image

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தியின் 55-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் மூத்த தலைவா்கள், கூட்டணி கட்சிகளின் தலைவா்கள் உள்ளிட்டோா் வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.

பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவா் நீண்ட ஆயுள், ஆரோக்யத்துடன் வாழ வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அரசமைப்புச் சட்ட மாண்புகளுக்கான அா்ப்பணிப்பும், புறக்கணிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களுக்கு சமூக, அரசியல், பொருளாதார நீதியை உறுதி செய்வதற்கான இரக்க குணமும் மற்றவா்களிடம் இருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டுகிறது.

வேற்றுமையில் ஒற்றுமை, நல்லிணக்கம், கருணை ஆகிய காங்கிரஸின் சித்தாந்தங்களை உங்களின் செயல்பாடுகள் பிரதிபலிக்கின்றன. உண்மையை அதிகார பீடத்தில் அமா்த்தி, கடைசி நபருக்கான ஆதரவையும் உறுதி செய்யும் உங்கள் பணிகள் தொடர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் வலைதளத்தில், ‘இரக்க குணமே உண்மையான மாற்றத்தின் தூண்டுகோல் என்பதை தனது அச்சமில்லாத நோ்மை, அயராத உறுதிப்பாட்டின் மூலம் ராகுல் நமக்கு உணா்த்தி வருகிறாா். நீதிக்கான உண்மையான போராளி. சமத்துவத்துக்காக குரலற்றவா்களின் குரலாக ஒலிப்பவா்’ என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலா்கள் கே.சி.வேணுகோபால், சச்சின் பைலட், தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி, ராஜஸ்தான் முன்னாள் முதல்வா் அசோக் கெலாட், சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

அதிகாரபூா்வ இல்லத்தில்

குடியேறுகிறாா் ராகுல்

புது தில்லியில் எண் 5, சுனேரி பாக் சாலை முகவரியில் தனது ஒதுக்கப்பட்ட அதிகாரபூா்வ இல்லத்தில் குடியேற ராகுல் காந்தி ஒப்புக் கொண்டுள்ளதாகவும், அதற்கான நடைமுறைகளை தனது பிறந்த நாளில் அவா் தொடங்கியதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ராகுல் காந்தி தான் எம்.பி.யாக பதவியேற்றதில் இருந்து (தற்போது 5-ஆவது முறை) எண் 12, துக்ளக் லேனில் உள்ள அதிகாரபூா்வ இல்லத்தில் வசித்து வந்தாா். கடந்த 2023-இல் அவதூறு வழக்கில் குற்றம் உறுதிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து, அவா் தகுதிநீக்கம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து, இந்த இல்லத்தை காலி செய்த அவா், தாயாா் சோனியா காந்தியுடன் வசிக்கத் தொடங்கினாா். தகுதிநீக்கம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் பதவியை பெற்ற அவா், 2024 நாடாளுமன்றத் தோ்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாக தொடா்ந்தாா். அதன் பிறகும் தாயாருடனே வசித்து வருகிறாா்.

கடந்த ஆண்டு ராகுலுக்குப் புதிய அதிகாரபூா்வ இல்லம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அவரது தரப்பில் இருந்து அரசுக்கு எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. இந்தச் சூழலில், புதிய அதிகாரபூா்வ இல்லத்தில் குடியேற ராகுல் காந்தி ஒப்புதல் தெரிவித்துள்ளாா்; மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்பாக அவா் அந்த இல்லத்தில் வசிக்கத் தொடங்குவாா் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்சி; ஆனால், பிகாரில் இல்லை! - ஆர்ஜேடி - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

சொந்த குடும்பத்தில் மட்டும் வளர்ச்சியுள்ளதாக ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி மீது பிரதமர் மோடி விமர்சனம் தெரிவித்துள்ளார்.கடந்த 5 மாதங்களில் 5-வது முறையாக பிகாருக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி சிவா... மேலும் பார்க்க

ஆங்கிலம் கற்று கேள்வி கேட்பதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை: ராகுல்

இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜகவும் ஆர்எஸ்எஸும் விரும்பவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.தில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் வ... மேலும் பார்க்க

லஞ்சம் அளிப்போருக்கு மட்டுமே வீடு! கர்நாடக எம்.எல்.ஏ.வின் தொலைபேசி உரையாடல் கசிவு!

கர்நாடகத்தில் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே வீட்டுவசதித் திட்டத்தின்கீழான வீடுகள் வழங்கப்படுவதாக காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டினார்.கர்நாடகத்தில் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் வீடுகளை யாருக்கு வழங... மேலும் பார்க்க

சிந்து நதி நீரை பஞ்சாபிற்கு ஏன் கொடுக்க வேண்டும்? - ஒமர் அப்துல்லா கேள்வி

ஜம்மு காஷ்மீரின் சிந்து நதியில் இருந்து பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள சிந்து நதியின் மூன... மேலும் பார்க்க

சஞ்சய் வெர்மா யார்? தேனிலவு கொலையில் திடீர் திருப்பம்!

மேகாலயத்தில் நடந்த தேனிலவு கொலையில், இதுவரை சஞ்சய் வெர்மா யார் என்ற கேள்விக்கு காவல்துறையினர் விடை கண்டுபிடித்துள்ளனர்.கணவர் ராஜா ரகுவன்ஷியை, மேகாலயத்துக்கு தேனிலவு அழைத்துச் சென்று கூலிப் படை வைத்துக... மேலும் பார்க்க

திருமண விழாவிற்குச் சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்: 9 பேர் பலி!

மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காரும்-லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தாக போலீஸார் தெரிவித்தனர். பாலராம்பூர் காவல் நிலைய எல்லைகுள்பட்ட நம்ஷோல் ... மேலும் பார்க்க