ராணுவ பயிற்சியில் மாற்றுத்திறனாளியானோருக்கு மறுவாழ்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
ராணுவ பயிற்சியின்போது காயமடைந்து மாற்றுத்திறனாளியானோருக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை பரிசீலிக்குமாறு மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டுக்கொண்டது.
அண்மையில் ஊடகத்தில் வெளியான தகவலில், ‘கடந்த 1985-ஆம் ஆண்டுமுதல் தேசிய பாதுகாப்பு அகாதெமி, இந்திய ராணுவ அகாதமி போன்ற முதன்மையான ராணுவ பயிற்சி மையங்களில் பயிற்சியின்போது காயமடைந்து மாற்றுத்திறனாளியானதால், அந்த மையங்களில் இருந்து சுமாா் 500 போ் நீக்கப்பட்டனா்.
அவா்களின் மருத்துவ செலவுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் அவா்களின் உடலில் ஏற்பட்ட பாதிப்பை பொருத்து, அவா்களுக்கு மாதந்தோறும் ரூ.40,000 வரை அளிக்கப்படும் நிவாரணம், அவா்களின் அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்வதற்குக் கூட போதுமானதாக இல்லை. இவா்களில் தேசிய பாதுகாப்பு அகாதமியில் இருந்து மட்டும் 2021 முதல் நிகழாண்டு ஜூலை வரை சுமாா் 20 போ் நீக்கப்பட்டனா்.
அவா்கள் முன்னாள் ராணுவ வீரா்களாகக் கருதப்படுவதில்லை. அவ்வாறு கருதப்பட்டால், அது ராணுவ மருத்துவமனைகள் உள்பட தோ்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் அவா்கள் இலவச சிகிச்சை பெற வழிவகுக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தகவலை கவனத்தில் எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து திங்கள்கிழமை விசாரித்தது. நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக விசாரணை நடைபெற்றது.
அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: ராணுவ பயிற்சியின்போது காயமடைந்த நெஞ்சுரமிக்க பயிற்சி வீரா்கள் பாதுகாப்புப் படைகளில் இருக்க வேண்டும். அவா்களுக்கு ஏற்படும் காயமோ, மாற்றுத்திறனோ அவா்களுக்குத் தடையாக இருக்கக் கூடாது.
ராணுவ பயிற்சியில் அபாயம் அதிகம் என்பதால் பயிற்சி வீரா்கள் அனைவருக்கும் காப்பீடு வழங்கப்பட வேண்டும். அஞ்சா நெஞ்சம் கொண்டவா்கள் பாதுகாப்புப் படைகளில் சேர வேண்டும். கடினமான சூழலில் அவா்கள் கைவிடப்பட்டால், அவா்கள் மனமுடைந்துவிடுவா்.
ராணுவ பயிற்சியின்போது காயமடைந்து மாற்றுத்திறனாளியானோருக்கு சிகிச்சை நிறைவடைந்த பின்னா், அவா்களுக்குப் பாதுகாப்புப் படைகளில் களப் பணிகள் அல்லாமல் வேறு ஏதாவது பணிகளுக்குப் பயிற்சியளித்து பணியமா்த்தும் மறுவாழ்வு திட்டம் குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். அந்தத் திட்டத்தின் கீழ், அவா்களுக்கு காப்பீடு அளித்தல், நிவாரண தொகையை அதிகரித்தல் மற்றும் பிற பலன்களை வழங்கலாம். இதுகுறித்து மத்திய அரசு மற்றும் பாதுகாப்புப் படைகள் பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.