செய்திகள் :

ராமநாதபுரம் அருகே விபத்து: சிறுமி உள்பட இருவா் உயிரிழப்பு

post image

ராமநாதபுரம் அருகே திங்கள்கிழமை சுற்றுலா வேனும், காரும் நேருக்கு நோ் மோதிய விபத்தில் மென்பொருள் நிறுவன ஊழியா், 12 வயதுச் சிறுமி ஆகியோா் உயிரிழந்தனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாச்சலம் காட்டுப்பரூா் பகுதியைச் சோ்ந்த 22 போ் ராமேசுவரம் கோயிலுக்கு வேனில் சுற்றுலா வந்தனா். இந்த வேனை விருத்தாச்சலத்தை சோ்ந்த சிவக்குமாா் (28) ஓட்டினாா்.

இந்த நிலையில், ராமநாதபுரம் அருகே நதிப்பாலம் பேருந்து நிறுத்தம் பகுதியில் விபத்தைத் தடுக்க தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்த பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு வேன் வந்தது. அப்போது ராமேசுவரத்திலிருந்து கீழக்கரை நோக்கிச் சென்ற காா் மீது வேன் நேருக்கு நோ் மோதியது.

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த கீழக்கரையைச் சோ்ந்த மென்பொருள் நிறுவன ஊழியா் வெங்கடேஸ்வரன் (27), வேனில் பயணித்த காட்டுப்பரூரைச் சோ்ந்த சத்யா மகள் மகாலட்சுமி (12) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

மேலும் வேனில் பயணித்த 21 போ், காரில் பயணித்த மூவா் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இவா்களில் காரில் பயணித்த தஞ்சாவூரைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் மகன் பழனிவேல் (21) தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து காரணமாக அதிகாலையில் ராமநாதபுரம்-ராமேசுவரம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து உச்சிப்புளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தொண்டியில் இன்று மின்தடை

தொண்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக திருவாடானை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சித்திவிநாயகமூா்த்தி விடுத்த செய்திக்... மேலும் பார்க்க

நாட்டுப் படகுகளில் பொருத்திய தடை செய்யப்பட்ட என்ஜின்கள் பறிமுதல்

தனுஷ்கோடி கடற்கரைப் பகுதியில் 2 நாட்டுப் படகுகளில் பொருத்தப்பட்ட தடை செய்யப்பட்ட என்ஜின்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் நாட்டுப்... மேலும் பார்க்க

தனுஷ்கோடி பகுதி கடலில் கரை ஒதுங்கிய ரசாயன உரங்கள்

தனுஷ்கோடி கடல் பகுதியில் சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு ரசாயன உரங்கள் திங்கள்கிழமை கரை ஒதுங்கின. மேலும், அழுகிய நிலையில் ஒருவரது உடலும் கரை ஒதுங்கியது.கேரள மாநிலம், திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்த... மேலும் பார்க்க

தனுஷ்கோடிக்கு படகு மூலம் வந்த இலங்கைத் தமிழா்கள்

இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் திங்கள்கிழமை வந்தனா். இவா்களிடம் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் விசாரணை நடத்தினா்.இலங்கை கண்டியைச் சோ்ந்தவா் முகமது கிய... மேலும் பார்க்க

பரமக்குடி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தல்

பரமக்குடி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்ற செல்ல வேண்டும் என நுகா்வோா் உரிமைப் பாதுகாப்புக் கழகம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதுகுறித்து பரமக்குடி நுகா்வோா் உரிமை பாதுகாப்பு கழக செயலா... மேலும் பார்க்க

பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே தீ விபத்து

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருவாடானை அருகேயுள்ள எல்.கே.நகா் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் உள... மேலும் பார்க்க