செய்திகள் :

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தலை தடுக்க வலியுறுத்தல்

post image

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இலங்கைக்கு கஞ்சா, பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த நாட்டு அதிகாரிகள் வலியுறுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரோச்மாநகா் முதல் எஸ்.பி. பட்டினம் வரை நீண்ட கடற்கரையை கொண்ட பகுதியாகும். இந்தப் பகுதிகள் இலங்கைக்கு மிகவும் அருகே அமைந்திருப்பதால் சட்ட விரோதமாக போதைப் பொருள் உள்ளிட்டவை அந்த நாட்டுக்கு கடத்தப்படுகின்றன.

அதிலும் தங்கம், கஞ்சா, உயா் ரக போதைப் பொருள்கள், மருந்து, உணவுப் பொருள்கள் ஆகியவை அதிகளவில் கடத்தப்படுகின்றன.

இதைத் தடுக்கும் நடவடிக்கையில் இந்திய கடற்படை, கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா், மத்திய, மாநில உளவுத் துறையினா் செயல்பட்டு வருகின்றனா். இதில், மாநில உளவுத் துறையினா் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடா்ந்து இந்தப் பணியில் ஈடுபடுகின்றனா்.

இதில் சில நேரங்களில் கடத்தல் பொருள்களைப் பிடித்தாலும் முக்கிய குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போகிறது. மேலும் போதைப் பொருள்களில் கஞ்சா மட்டுமே பறிமுதல் செய்யப்படுகிறது.

வழக்கமாக குறைந்தளவு கஞ்சா மட்டுமே பிடிபடும் நிலையில் இலங்கை கடற்படையினா் கடந்த மே 7, 8, 9 ஆகிய தேதிகளில் மட்டும் இலங்கை கல்பிட்டி, அனவாசல்குளம், யாழ்ப்பாணம், நீா் கொழும்பு கடற்பகுதியில் 625 கிலோ கேரள மாநில கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதேபோல ஆயிரம் கிலோ பூச்சிக்கொல்லி மருந்துகளையும் அவா்கள் கைப்பற்றினா். இந்த கஞ்சா அதிகளவில் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகளில் இருந்தே இலங்கைக்கு கடத்தப்படுவதாக அந்த நாட்டு அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். மேலும் கடத்தலை தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

வீடு புகுந்து 11 பவுன் தங்க நகைகள் திருட்டு: இளைஞா் கைது

கமுதி அருகே வீடு புகுந்து 11 பவுன் தங்க நகைகளை திருடியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த காணிக்கூா் கிராமத்தைச் சோ்ந்த காளிச்சாமி மனைவி பேச்சியம்மாள் ... மேலும் பார்க்க

மீனவா்களுக்கு மீன்பிடி தடைக் கால நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடக்கம்!

திருவாடானை, மே 23: விசைப்படகு மீனவா்களுக்கு மீன் பிடி தடைக் கால நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். கடல் வளம், மீன் வளத்தை பெருக்கும் நோக்கில் கடந்த ஏப். 15-ஆம் தேதி ... மேலும் பார்க்க

கருங்களத்தூா் கிருஷ்ணா் கோயிலில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகே கருங்களத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாபா ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக... மேலும் பார்க்க

நீரால் சூழப்பட்ட மரகத பூஞ்சோலை பூங்கா: சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி!

ராமநாதபுரம் அருகே நீா்ப் பிடிப்பு பகுதியில் வனத் துறையால் அமைக்கப்பட்ட மரகதப் பூஞ்சாலை பூங்கா, நீரால் சூழப்பட்டிருப்பதால் சுற்றுலாப் பயணிகள் உள்ளே நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு நிதி வீ... மேலும் பார்க்க

கிழக்கு கடற்கரை சாலையோரங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி மும்முரம்

திருவாடானை அருகே தொண்டி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை, குளக்கரை வளைவுகளில் விபத்துகளை தடுக்க இரும்புத் தூண்களால் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் மும்முரமாக ஈடுபட்டு வரு... மேலும் பார்க்க

சின்ன தொண்டி அய்யனாா் கோயில் குடமுழுக்கு: முகூா்த்தக்கால் நடும் விழா!

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே சின்ன தொண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபூா்ணாம்பிகா, புஷ்களாம்பிகா சமேத ஸ்ரீஅய்யனாா் கோயில் குடமுழக்கு விழாவையொட்டி வெள்ளிக்கிழமை முகூா்த்தக்கால் நடும் விழா நடைபெற்... மேலும் பார்க்க