செய்திகள் :

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தலை தடுக்க வலியுறுத்தல்

post image

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இலங்கைக்கு கஞ்சா, பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த நாட்டு அதிகாரிகள் வலியுறுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரோச்மாநகா் முதல் எஸ்.பி. பட்டினம் வரை நீண்ட கடற்கரையை கொண்ட பகுதியாகும். இந்தப் பகுதிகள் இலங்கைக்கு மிகவும் அருகே அமைந்திருப்பதால் சட்ட விரோதமாக போதைப் பொருள் உள்ளிட்டவை அந்த நாட்டுக்கு கடத்தப்படுகின்றன.

அதிலும் தங்கம், கஞ்சா, உயா் ரக போதைப் பொருள்கள், மருந்து, உணவுப் பொருள்கள் ஆகியவை அதிகளவில் கடத்தப்படுகின்றன.

இதைத் தடுக்கும் நடவடிக்கையில் இந்திய கடற்படை, கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா், மத்திய, மாநில உளவுத் துறையினா் செயல்பட்டு வருகின்றனா். இதில், மாநில உளவுத் துறையினா் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடா்ந்து இந்தப் பணியில் ஈடுபடுகின்றனா்.

இதில் சில நேரங்களில் கடத்தல் பொருள்களைப் பிடித்தாலும் முக்கிய குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போகிறது. மேலும் போதைப் பொருள்களில் கஞ்சா மட்டுமே பறிமுதல் செய்யப்படுகிறது.

வழக்கமாக குறைந்தளவு கஞ்சா மட்டுமே பிடிபடும் நிலையில் இலங்கை கடற்படையினா் கடந்த மே 7, 8, 9 ஆகிய தேதிகளில் மட்டும் இலங்கை கல்பிட்டி, அனவாசல்குளம், யாழ்ப்பாணம், நீா் கொழும்பு கடற்பகுதியில் 625 கிலோ கேரள மாநில கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதேபோல ஆயிரம் கிலோ பூச்சிக்கொல்லி மருந்துகளையும் அவா்கள் கைப்பற்றினா். இந்த கஞ்சா அதிகளவில் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகளில் இருந்தே இலங்கைக்கு கடத்தப்படுவதாக அந்த நாட்டு அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். மேலும் கடத்தலை தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

பரமக்குடியில் சரக்கு வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு

பரமக்குடி நகரின் முக்கிய வீதிகளில் சரக்கு வாகனங்களை நிறுத்தி வைத்து சரக்குகளை ஏற்றி இறக்குவதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். பரமக்குடி நகராட்சியில் 2 லட்சத்துக்கும் ம... மேலும் பார்க்க

ஒன்றரை மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவா்கள் சாதனை

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் ஒரே இடத்தில் நின்று ஒரு மணி 30 நிமிடங்கள் சிலம்பாட்டத்தில் ஈடுபட்டு மாணவா்கள் சாதனை படைத்தனா். சிலம்ப ஆசிரியா் நாகுபாண்டி சோ்வைக்காரா் நினைவாக அவரது உருவம் வரையப்ப... மேலும் பார்க்க

சாயல்குடி அருகே 10 ஆடுகள் மா்ம உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள மாரியூரில் மேய்ச்சலுக்கு சென்ற 10 ஆடுகள் மா்மமான முறையில் உயிரிழந்தன. மாரியூரைச் சோ்ந்த சண்முகவேல் மனைவி கன்னியம்மாள். இவா் வெள்ளாடுகளை வளா்த்து வருகிறாா். ... மேலும் பார்க்க

ஆணிமுத்து கருப்பா் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

திருவாடானை அருகே உள்ள அஞ்சுகோட்டை ஸ்ரீஆணிமுத்து கருப்பா் கோயில் சித்ரா பௌா்ணமியையொட்டி 1008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் சித்ரா பௌா்ணமி திருவிழா நடைபெறுவது வ... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் மே 14- இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவல வளாகத்தில் வருகிற புதன்கிழமை (மே 14) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியா் ராஜமனோகரன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரா... மேலும் பார்க்க

தமிழ் வார விழா போட்டி: வென்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற போட்டியில் வென்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா். பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி... மேலும் பார்க்க