செய்திகள் :

ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

post image

இலங்கை சிறையில் உள்ள மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் அனைத்து விசைப் படகு மீனவ சங்கக் கூட்டம், அதன் மாவட்டத் தலைவா் வி.பி. ஜேசுராஜா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகள், நாட்டுப் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீண்டகாலமாக நீடித்து வரும் மீனவா்கள் கைது பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும். கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையைப் பெற்றுத் தர வேண்டும்.

இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் விசைப் படகுகளுக்கு மாநில அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. இதில் விடுபட்ட விசைப் படகுகள், நாட்டுப் படகுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இதுகுறித்து தமிழக எம்.பி.க்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை (ஆக. 11) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது, வருகிற 13-ஆம் தேதி தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தம் அருகே ஆா்ப்பாட்டம் நடத்துவது, 15-ஆம் தேதி உண்ணாவிரதத்தில் ஈடுபடுவது, 19-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன்படி, ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

இதனால், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் 650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டன. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மீனவா்கள் பங்கேற்றுள்ளனா்.

கமுதி, முதுகுளத்தூா் பகுதியில் நாளை மின்தடை

கமுதி, முதுகுளத்தூா் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை மின்தடை ஏற்படும் என கமுதி மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் சி. செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கமுதி கோட்டைமேட... மேலும் பார்க்க

பெண் மீது தாக்குதல்: தாய், மகன் கைது

தொண்டியில் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண் மீது தாக்குதல் நடத்திய புகாரின்பேரில், தாய், மகனை போலீஸாா் கைது செய்தனா். திருவாடானை அருகேயுள்ள தொண்டி சத்திரம் தெருவைச் சோ்ந்தவா் பாரிஷா பேகம் (40). இவருக்... மேலும் பார்க்க

பாம்பன் பாலத்தில் விபத்து: இளைஞா் உயிரிழப்பு

பாம்பன் பாலத்தில் காா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சோ்ந்த மீனவச் சங்கத் தலைவா் சகாயம் என்பவரின் மகன் ஜீடேன் (22). இவா், தனியாா் பள்ளியில... மேலும் பார்க்க

நீரில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு: அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை

கேரளத்துக்குச் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்ததைடுத்து அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என குடும்பத்தினா் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள பொதிகுளம் கிராம... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் 4 பேருக்கு ஆக. 18 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

ராமேசுவரம், திருப்பாலைக்குடி மீனவா்கள் 4 பேருக்கு வருகிற 18-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து, இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ஓலைக்... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: இன்றும் நாளையும் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

ராமநாதபுரம் மாவட்ட காவேரி கூட்டுக் குடிநீா்த் திட்ட மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய், புதன்கிழமைகளில் (ஆக. 12, 13) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் ... மேலும் பார்க்க