செய்திகள் :

ராமேஸ்வரம்: மீண்டும் 5 பேர் கைது; ஒன்றரை மாதத்தில் 31 மீனவர்களைக் கைது செய்த இலங்கை; பின்னணி என்ன?

post image

ராமநாதபுரம் மாவட்டம் துவங்கி நாகபட்டினம் வரை உள்ள 6 மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரமாக மீன்பிடி தொழிலையே நம்பி உள்ளனர். அதிலும் குறிப்பாக வங்கக் கடலில் உள்ள பாக் நீரிணை பகுதியே அவர்களின் வாழ்வாதார தளமாக இருந்து வருகிறது.

அதை நம்பியே பாக் நீரிணை பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த பத்தாண்டுகளுக்காக தமிழக மீனவர்களைக் குறிவைத்துத் தாக்குதல்களையும் சிறைபிடிப்புகளையும் தொடர்ந்து வருகின்றனர் இலங்கை கடற்படையினர்.

ராமேஸ்வரம் துறைமுகத்தில் படகுகள்

மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் 26 மீனவர்களையும் 4 விசைப்படகுகளையும் சிறை பிடித்துச் சென்றுள்ளது இலங்கை கடற்படை.

இந்நிலையில் நேற்று ராமேஸ்வரத்திலிருந்து 391 படகுகளில் மீன் துறை அனுமதியுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் பாரம்பர்யமாக மீன்பிடிக்கும் பாக் நீரிணை பகுதியில் நேற்று இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜஸ்டின் என்பவரது விசைப்படகினை சிறை பிடித்துச் சென்றனர்.

மேலும் அந்தப் படகில் மீன்பிடிக்கச் சென்ற படகின் உரிமையாளர் ஜஸ்டின் மற்றும் மோபின், சைமன், சேகர், டெனிசன் ஆகிய 5 மீனவர்களையும் சிறை பிடித்துச் சென்றனர்.

கடந்த ஒன்றரை மாதங்களில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்துச் செல்லப்பட்ட 26 மீனவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று மேலும் 5 மீனவர்கள் சிறைபிடித்து செல்லப்பட்டிருப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் சிறை பிடிக்கப்பட்ட படகுகள் ஒன்று கூட விடுவிக்கப்படாத நிலையில் மீனவர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டு வந்தனர். ஆனால் கடந்த ஒன்றரை மாதங்களில் இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்ட ஒரு மீனவர் கூட விடுவிக்கப்படவில்லை.

கடந்த மாதம் கைதான மீனவர்கள்

வழக்கமாக சிறை பிடிக்கப்படும் மீனவர்களை விசாரணைக்குப் பின் உள்ளூர் போலீஸாரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைப்பர். நீதிமன்றத்தில் அவர்களை போலீஸார் ஆஜர் படுத்திய பின் முதல் வாய்தாவின் போதே விடுவிக்கப்படுவார்கள்.

ஆனால் கடந்த ஒன்றரை மாதங்களில் பிடிபட்ட 26 மீனவர்கள் 3 வாய்தாக்கள் முடிந்தும் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று மேலும் 5 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருப்பது தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழிலைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

நெல்லை ஆணவக் கொலை: `அலட்சியம்; தனிச்சட்ட கோரிக்கை புறக்கணிப்பு...' - திமுக-வைச் சாடும் பா.ரஞ்சித்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஐடி ஊழியர் கவின், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டின் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் பிரமுகர்களும், இய... மேலும் பார்க்க

சூட்டைக் கிளப்பிய பஹல்காம் விவாதம் `டு' மத்திய அரசைக் கண்டித்த ஓபிஎஸ் - Daily Roundup 29-07-2025

``இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்ததை செய்ததாக 26 முறை அமெரிக்க அதிபர் தெரிவித்திருக்கிறார். அதிபர் ட்ரம்ப் பொய் சொல்கிறார். அவர் ஒரு பொய்யர் என்று மட்டும் சொல்லுங்கள் பார்க்கலாம்" என நாடாளும... மேலும் பார்க்க

Edappadiயின் செயல் - டென்ஷனான BJP; கடுகடுக்கும் ADMK நிர்வாகிகள்| Off The Record

எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டிருக்கும் சுற்றுப் பயணத்தில் நடந்த அரசியல், குளறுபடிகள், உட்கட்சி அரசியல் குறித்தும் விவரிக்கிறது இந்த Off The Record. மேலும் பார்க்க

Pakistan Chocolate உடன் பதுங்கியிருந்த Terrorists - Intelligence Failure | Imperfect Show 29.7.2025

* ஆபரேஷன் சிந்தூர்: "இந்தியாவை கோழை நாடாக்கியிருக்கிறீர்கள்" - சு.வெங்கடேசன்* அகழாய்வுப் பணிகளுக்கான நிதியில் 94% பிரதமர் பிறந்த வத்நகரில் பயன்படுத்தப்பட்டுள்ளது -சு.வெங்கடேசன்* “பஹல்காம் தாக்குதல் உள... மேலும் பார்க்க

"ஆணவக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க.." - வேல்முருகன் கருத்து!

திருநெல்வேலியில், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 28 வயது ஐ.டி ஊழியர் கவின்குமார் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறது. கொலையாளி சுர்ஜித்தின் தந்தை-த... மேலும் பார்க்க