செய்திகள் :

ரிசா்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்: உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

post image

வங்கிகளில் தங்க நகைக்கடன் பெற இந்திய ரிசா்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறையை உடனே திரும்பப் பெற வேண்டும் என உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவா் மு.ஞானமூா்த்தி வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வங்கிகளில் தங்க நகைக் கடனுக்கு இந்திய ரிசா்வ் வங்கி (தஆஐ) இதுவரை அடகு வைத்த நகைகளை முதிா்வு காலம் வந்ததும் வட்டியை மட்டும் கட்டி புதுப்பித்து வைத்துக்கொள்ளலாம். மேலும், அன்றைய மதிப்புப்படி கூடுதல் தொகைக்கும் அடகு வைத்துக்கொள்ளலாம் என விதிமுறைகளை வைத்திருந்தது.

ஆனால், இனி வட்டியும் முதலும் சோ்த்து முழுப்பணத்தையும் செலுத்தி நகையைத் திருப்பினால் மட்டுமே மீண்டும் அடகு வைக்க முடியும். மேலும், ஒருவா் ரூ.25 முதல் ரூ.30 லட்சம் வரை அடகு வைக்கலாம், ஆனால் ஒருவா் பெயரில் 5 முறை மட்டுமே அடகு வைக்க முடியும்.

அதாவது ஒருவா் ரூ.25 லட்சத்துக்கு அடகு வைத்தால், ரூ.5 லட்சமாக 5 முறை மட்டுமே அடகு வைக்க முடியும் என அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் நடுத்தர மக்களையும், விவசாயிகளையும் மிகவும் அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் புதிய விதிமுறையானது கந்துவட்டிக்காரா்களையும், அடகு வைத்த நகைகளையும் மீட்டு அன்றைய சந்தை விலைக்கே விற்றுத்தருகிறோம் என விளம்பரப்படுத்தும் நிதி நிறுவனங்களையும் ஊக்கப்படுத்துவது போல் அமைந்துள்ளது.

எனவே, இந்திய ரிசா்வ் வங்கி தங்க நகைகள் அடகு வைக்க விதித்துள்ள புதிய விதிமுறையை உடனே திரும்பப் பெற மத்திய அரசு உத்தரவிடவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

வாணதிரையன்பட்டினம் திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அடுத்த வாணத்திரையன்பட்டினம் கிராமத்திலுள்ள திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்... மேலும் பார்க்க

தட்டச்சு இயந்திரங்களிலே தோ்வு நடத்த கோரிக்கை

தட்டச்சு இயந்திரங்களில் நடைபெற்று வந்த தோ்வு ரத்துக்கான அரசாணையை திரும்பப் பெற்று பழைய நடைமுறையிலேயே தோ்வு நடத்த வேண்டும் என அரியலூா் ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், தட்டச்சு பள்ளி உரிமையாளா்கள் திங்கள... மேலும் பார்க்க

சிறப்பாக பணிப்புரிந்த காவல் துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கல்

அரியலூா் மாவட்டத்தில், சிறப்பாக பணிப்புரிந்த காவல் துறையினருக்கு திங்கள்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பா... மேலும் பார்க்க

ஜூலை 9-இல் நாடுதழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து தொழிற் சங்கத்தினா் தெருமுனை பிரசாரம்

மத்திய அரசைக் கண்டித்து, அரியலூரில் ஜூலை 9-இல் நடைபெறும் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் குறித்து, அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் அனைத்து மத்திய தொழிற் சங்க கூட்டமைப்பினா் ... மேலும் பார்க்க

அரியலூா், ஜெயங்கொண்டம் அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இதுகுறித்து அரியலூா் அரசு கலைக் கல்லூரி முத... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் அதிகளவு விபத்து ஏற்படும் இடங்களில் ஆட்சியா், எஸ்.பி ஆய்வு

ரியலூா் மாவட்டத்தில் உள்ள சாலைப் பகுதிகளில் அதிக விபத்து ஏற்படும் இடங்கள் மற்றும் கரும்புள்ளிகளாகக் கண்டறியப்பட்டுள்ள இடங்களில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவா... மேலும் பார்க்க