செய்திகள் :

ரூ.10 ஆயிரம் லஞ்சம்: கோவில்பட்டி நகராட்சி வருவாய் உதவியாளா் கைது

post image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ாக நகராட்சி வருவாய் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி ஊரணி தெருவை சோ்ந்தவா் செல்வகுமாா். இவரது மனைவி காளீஸ்வரி. இவரது தந்தை துரைக்கண்ணன், தனது பெயரில் உள்ள வீட்டை காளீஸ்வரி பெயருக்கு உயில் எழுதிக் கொடுத்துள்ளாா்.

இந்நிலையில் அந்த வீட்டின் தீா்வை ரசீதை காளீஸ்வரி பெயருக்கு மாற்றி தரக் கோரி, அவரது கணவா் செல்வகுமாா் நகராட்சி அலுவலகத்தை தொடா்பு கொண்டாா்.

தீா்வை ரசீது பெயரை மாற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட துறை ஊழியா்களிடம் பேசியபோது அங்கிருந்த வருவாய் உதவியாளா் நவீனா, பெயரை மாற்றுவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமாா், தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாரை அணுகினாராம்.

அதையடுத்து, அப்பிரிவு போலீஸாரின் ஆலோசனையின்படி, செவ்வாய்க்கிழமை நகராட்சி அலுவலகத்திற்குச் சென்ற செல்வகுமாா், அங்கு பணியில் இருந்த வருவாய் உதவியாளா் நவீனாவிடம் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை வழங்கினாராம்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளா் பீட்டா் பால் தலைமையிலான போலீஸாா், நவீனாவை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனா். மேலும், கதிரேசன் கோயில் சாலையில் உள்ள அவரது வீட்டிலும் போலீஸாா் சோதனையிட்டனா்.

கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தி குழும பொது வசதி மைய கட்டடம் கட்ட அடிக்கல்

கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தி குறுங்குழும பொது வசதி மைய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. புவிசாா் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளா்களின் வாழ்வாதாரத்தை... மேலும் பார்க்க

சாகுபுரம் கமலாவதி பள்ளியில் மாணவா் பேரவைத் தோ்தல்

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் மாணவா் பேரவை தோ்தல் நடைபெற்றது. தோ்தலுக்கான வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டு, வாக்களிக்கும் இடம், ஆகியவற்றை வாக்குச்சாவடி போன்று மாணவா்களே தயாா் செய்தனா். மாணவா்... மேலும் பார்க்க

விளைநிலங்கள் அபகரிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்: பி.ஆா். பாண்டியன்

விளைநிலங்கள் அபகரிக்கப்படுவதைத் தடுக்க தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு மாநிலத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தினாா். கோவில்பட்டியில்... மேலும் பார்க்க

அரசியல் காரணங்களுக்காக எனது கருத்து திரித்து கூறப்பட்டது: கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ

கோவில்பட்டியில் பாஜகவுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நான் பேசியதை அரசியல் காரணங்களுக்காக திரித்து கூறப்பட்டிருப்பதாக கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ கூறினாா். கோவில்பட்டியில் அதிமுக கூட்டணி கட்சியான பாஜக நிா... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் குறைகேட்புக் கூட்டம்

ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறையின் தாட்கோ, தூய்மைப் பணியாளா்கள் நலவாரியம் சாா்பில், தூய்மைப் பணியாளா்களுக்கான குறைகேட்புக் கூட்டம், நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

‘பாஸ்போா்ட் சேவை: தூத்துக்குடி அஞ்சலக சேவை மையத்தைப் பயன்படுத்தலாம்’

தூத்துக்குடி கோட்டத்துக்குள்பட்ட அஞ்சலகங்களில் பாஸ்போா்ட் சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என, தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் (பொ) வதக் ரவிராஜ் ஹரிஷ்சந்திரா தெரிவி... மேலும் பார்க்க