செய்திகள் :

``ரூ.22 கோடியில் கௌசிகா நதி புனரமைப்பு; 3000 ஏக்கர் விளைநிலம் பயன்பெறும்'' - தங்கம் தென்னரசு

post image

விருதுநகர் மாவட்டம் நீர்வளத்துறை வைப்பாறு வடிநிலக்கோட்டத்தின் கீழ் ரூ.22 கோடி மதிப்பீட்டில் விருதுநகர் கெளசிகா நதியை புனரமைக்கும் நவீனமயமாக்கல் பணி மற்றும் வரத்துக்கால்வாய்களை தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் மாநில நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

கௌசிகா மகாநதியின் வரைபடம்

நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழ்நாடு நீர்வளத்தில் சிறந்த மாநிலம் என்றும், ஒவ்வொரு காலகட்டத்திலும் நமது இலக்கியத்தில் ஆறுகளை பற்றிய செய்திகள் நிறைய உள்ளன.

காலநிலை மாற்றத்தால் சுற்றுப்புற சூழலில் ஏற்படும் மாற்றங்களை உள்வாங்கி அவற்றை சீர்திருத்தக்கூடிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது என்பதால் தான் முதலமைச்சர் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.

நதிகளை சுத்தப்படுத்தும் போது நீலத்தடி நீர் மட்டம் உயரும், விவசாயம் செழிக்கும் என்றும் இந்த திட்டத்தின் மூலம் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் பயன்பெறும்”. என்றார்.

மாவட்ட அருங்காட்சியம்

பின்னர் ரூ.6.80 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அருங்காட்சியக கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.

அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "அருங்காட்சியகத்தின் பயனை தொலைவில் உள்ள அனைத்து மாவட்ட மக்களும் பெற வேண்டும் என்கின்ற தமிழக அரசின் நோக்கத்துடன் 23 மாவட்டங்களில் அருங்காட்சியகங்கள் செயல்பட்டு வருகின்றன.

அமைச்சர் தங்கம் தென்னரசு

ஒரு மாவட்டத்தின் நிலவியல், தொல்லியல், வரலாறு, கலை, பண்பாடு, கனிம வளங்கள், இயற்கை அமைப்புகள், தாவர வகைகள் மற்றும் விலங்கினங்கள் இவற்றை ஒரே இடத்தில் அறிந்து கொள்கின்ற நல்வாய்ப்பினை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்குகின்ற இடமாக மாவட்ட அருங்காட்சியகங்கள் திகழ்கின்றது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அருங்காட்சியம் அமைத்தல் என்ற அரசின் சீரிய நோக்கத்தினை செயல்படுத்தும் விதத்தில் அருங்காட்சியகங்கள் துறை செயல்பட்டு வருகிறது" என்றார்.

அப்போது பணியினை மேற்கொண்டு வரும் காண்ட்ராக்டரை பணியை விரைந்து முடியுங்கள், நீங்கள் முடிக்கும் வரை முதல்வர் காத்திருக்க முடியுமா என்று கடிந்து கொண்டார்.

"Legal Opinion கேட்டிருக்கிறோம்; பார்ப்போம்!" - கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஸ்டாலின் சொன்னதென்ன?

ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசியலில் தொடர்ந்து வலுத்துவரும் சூழலில், தமிழக முதல்வரை சந்தித்திருக்கிறார்கள் தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள். இந்த திடீர் சந்தி... மேலும் பார்க்க

"இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிய ஒரே அரசு தமிழ்நாடு" - மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசுதான் என பெருமிதத்துடன் கூறியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதுகுறித்த அவரது எக்ஸ் தள பதி... மேலும் பார்க்க

Bihar: "என் அப்பாதான் ஆணவப்படுகொலை செய்தார்; என் மடியிலேயே உயிரைவிட்டான் என் காதலன்"-கதறி அழும் பெண்

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவெங்கும் தினமும் சாதிய ஆணவப்படுகொலைகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. நெல்லையில் கவின் ஆணவப்படுகொலை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 6) அதே நெல... மேலும் பார்க்க

NTK: `பனை, மாடு மேய்ச்சல், மரம், தண்ணீர், மலை மாநாடுகள்.!' - கைகொடுக்கிறதா சீமானின் புது ரூட்?

‘ஒரணியில் தமிழ்நாடு’, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என தி.மு.க, அ.தி.மு.க தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கும் சூழலில், மாடு மாநாடு, தண்ணீர் மாநாடு என புது வழி எடுக்கிறது நாம் தமிழர் கட்சி... மேலும் பார்க்க

50 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்த தபால் சேவை நிறுத்தம்; தபால் பெட்டிகளுக்கு விடைகொடுப்போம்!

டிஜிட்டல் யுகம் நாளுக்கு நாள் அசுர வளர்ச்சியடைந்து வரும் இந்த காலத்தில் எல்லாமே வேகம் அதிவேகம்தான். காத்திருப்பு என்ற வார்த்தைக்கூட பயன்பாட்டில்லை, கால வேகத்தில் காலாவதியாகிவிட்டது. இங்கிலாந்தில், லோங... மேலும் பார்க்க

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்து 50 ஆண்டுகளாக கிடைக்காத இழப்பீடு - போராட்டம் தீவிரம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக 1981-ம் ஆண்டு 960 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாகியும் தற்போது வரை நிலம் கொடுத்த மக்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. இதற்கு எதிராக ந... மேலும் பார்க்க