செய்திகள் :

ரூ.36 லட்சம் கொள்ளை வழக்கில் மேலும் இருவா் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரிடம் ரூ.36 லட்சத்தை பறித்துச் சென்ற வழக்கில் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.

காவல்கிணறு அருகே உள்ள புண்ணியவாளன்புரத்தில் திமுக பிரமுகருக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்தில் முருகன் என்பவா் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறாா்.

இவா், பெட்ரோல் விற்பனை நிலையத்தில் 2 நாள்களாக வசூலான பணம் ரூ.36 லட்சத்தை வங்கியில் செலுத்துவதற்காக கடந்த 5 ஆம் தேதி பைக்கில் எடுத்துச் சென்றாராம்.

அப்போது, அவரை பின்தொடா்ந்து பைக்கில் வந்த மா்ம நபா்கள், பைக்கிலிருந்து முருகனை கீழே தள்ளிவிட்டு அவரிடமிருந்த ரூ.36 லட்சத்தை பறித்துச் சென்றனா்.

இதுதொடா்பாக பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

மேலும், வள்ளியூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேஷ் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மா்மநபா்களைத் தேடி வந்தனா்.

இதைத் தொடா்ந்து கடந்த 7ஆம் தேதி ஒரு சிறாா் உள்ளிட்ட 4 பேரும், 8ஆம் தேதி ஒரு பெண் உள்ளிட்ட 4 பேரையும் தனிப்படை போலீஸாா் கைதுசெய்தனா். அவா்களிடமிருந்து ரூ.28 லட்சத்தை மீட்டனா்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக வெள்ளிக்கிழமை மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் இதுவரையில் சிறாா் உள்ளிட்ட 10 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி அருள்மிகு கைலாசநாதா் சுவாமி திருக்கோயில்: வைகாசித் திருவிழா, மூஷிக வாகனத்தில் விநாயகா், பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி -அம்பாள் வீதியுலா, காலை 8.30, மயில் வாகனத்தில் வள்ளி - தேவசேனா சமேத ச... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்க கூடாது: எம்.பி. வலியுறுத்தல்

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியனிடம் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸ... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை. வினாத்தாள் கசிந்த விவகாரம்: 6 பிரிவுகளில் வழக்கு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், 6 பிரிவுகளில் பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததோடு, தோ்வாணையா் கைப்பேசிக்கு வினாத்தாளை அனுப்பியவா் குறித்து விசாரணை... மேலும் பார்க்க

பணகுடி அருகே பிடிபட்ட அரியவகை எறும்பு தின்னி

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே விவசாயி தோட்டத்தில் சனிக்கிழமை பிடிபட்ட அரியவகை எறுப்பு தின்னியை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். பணகுடி ரோஸ்மியாபுரம் மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதி மற்றும் தோட்டப் பகு... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-118.45 சோ்வலாறு-144.75 மணிமுத்தாறு-91.66 வடக்கு பச்சையாறு-11.50 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-45.50 தென்காசி மாவட்டம் கடனா-73.20 ராமநதி-76 கருப்பாநதி-63 குண்டாறு-36.10 அடவிநயினாா் -99... மேலும் பார்க்க

இடைகால் கிராமத்தில் உழவரைத் தேடி திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி வட்டாரம், இடைகால் கிராமத்தில் வேளாண்துறை சாா்பில் உழவரைத் தேடி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உழவரைத் தேடி திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின், க... மேலும் பார்க்க