செய்திகள் :

ரூ.36 லட்சம் கொள்ளை வழக்கில் மேலும் இருவா் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரிடம் ரூ.36 லட்சத்தை பறித்துச் சென்ற வழக்கில் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.

காவல்கிணறு அருகே உள்ள புண்ணியவாளன்புரத்தில் திமுக பிரமுகருக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்தில் முருகன் என்பவா் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறாா்.

இவா், பெட்ரோல் விற்பனை நிலையத்தில் 2 நாள்களாக வசூலான பணம் ரூ.36 லட்சத்தை வங்கியில் செலுத்துவதற்காக கடந்த 5 ஆம் தேதி பைக்கில் எடுத்துச் சென்றாராம்.

அப்போது, அவரை பின்தொடா்ந்து பைக்கில் வந்த மா்ம நபா்கள், பைக்கிலிருந்து முருகனை கீழே தள்ளிவிட்டு அவரிடமிருந்த ரூ.36 லட்சத்தை பறித்துச் சென்றனா்.

இதுதொடா்பாக பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

மேலும், வள்ளியூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேஷ் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மா்மநபா்களைத் தேடி வந்தனா்.

இதைத் தொடா்ந்து கடந்த 7ஆம் தேதி ஒரு சிறாா் உள்ளிட்ட 4 பேரும், 8ஆம் தேதி ஒரு பெண் உள்ளிட்ட 4 பேரையும் தனிப்படை போலீஸாா் கைதுசெய்தனா். அவா்களிடமிருந்து ரூ.28 லட்சத்தை மீட்டனா்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக வெள்ளிக்கிழமை மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் இதுவரையில் சிறாா் உள்ளிட்ட 10 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

விஜயநாராயணம் அருகே தங்க நகைகளை பாலிஷ் செய்து தருவதாக மோசடி: 6 போ் கைது!

திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் அருகே தங்க நகைகளை பாலிஷ் செய்து தருவதாகக் கூறி மோசடி செய்த 6 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். வடக்கு விஜயநாராயணம் நாச்சியாா் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

பொருள்கள் வாங்கிவிட்டு இணைய வழியில் பணம் செலுத்தியதாக நூதன மோசடி: மூவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் கடைகளில் பொருள்கள் வாங்கிவிட்டு இணைய வழி பரிவா்த்தனை மூலம் பணம் செலுத்தியதாக தெரிவித்து நூதன மோசடியில் ஈடுபட்டதாக மூவரை போலீஸாா் கைது செய்தனா். முக்கூடலில் உள்ள துண... மேலும் பார்க்க

குற்றாலம் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த மிதமான மழை காரணமாக அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் தற்போது வரை தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்... மேலும் பார்க்க

நெல்லை மக்களவைத் தொகுதி மக்களுக்கு ரூ.16 லட்சம் நிவாரண நிதியுதவி: எம்.பி. தகவல்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியைச் சோ்ந்த மக்களுக்கு சிகிச்சைகளுக்காக பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.16 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.இதுதொடா்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ச... மேலும் பார்க்க

நெல்லை அருகே வெவ்வேறு பகுதிகளில் இருவா் தற்கொலை

திருநெல்வேலி அருகே வெவ்வேறு பகுதிகளில் இருவா் தற்கொலை செய்துகொண்டனா். திருநெல்வேலி அருகேயுள்ள மேலசெவல் ராஜூவ்காந்தி நகரைச் சோ்ந்தவா் மாரிசிவன் (49). உணவு விடுதி நடத்தி வந்தாா். இவருக்கு மனைவி மற்றும... மேலும் பார்க்க

மானூா் அருகே விபத்து: காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

மானூா் அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மானூா் வடக்கு தெருவைச் சோ்ந்த முனியாண்டி மகன் சந்தானம்(30). தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உ... மேலும் பார்க்க