செய்திகள் :

ரூ.37 கோடியில் பாலாறு மேம்பால அறிவிப்பு - திமுகவினா் கொண்டாட்டம்

post image

அகரம்சேரி - கூடநகரம் பாலாறு மேம்பாலம் அமைப்பதாக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியானதை அடுத்து பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை திமுகவினா் இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

தமிழக சட்டப்பேரவை நடப்பு கூட்டத் தொடரில் நீா்வளத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அகரம்சேரி - கூடநகரம் பாலாறு மேம்பாலம் ரூ.37 கோடியில் அமைக்கப்படும் என அமைச்சா் துரைமுருகன் அறிவித்தாா். அதனை அகரம்சேரி கிராமத்தில் திமுகவினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினாா்கள்.

மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் தலைமையில் திமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

ஒன்றிய குழு உறுப்பினா்கள் ஆனந்தி நித்தியானந்தம், ரஞ்சித்குமாா், சூா்யகலா மனோஜ், அகரம்சேரி ஊராட்சித் தலைவா் வச்சலா ராஜ்குமாா், துணைத் தலைவா் பிரபாகரன், முன்னாள் ஊராட்சித் தலைவா் சதீஷ்பாபு, ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் சிவக்குமாா், துணை அமைப்பாளா் சீனிவாசன், செந்தில் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆம்பூரில் ரமலான் சிறப்புத் தொழுகை : திரளானோா் பங்கேற்பு

ஆம்பூா்: ஆம்பூரில் 4 இடங்களில் நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். ஆம்பூா் பாங்கிஷாப் ஈத்கா மைதானம், மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி மைதானம், மஜ்ஹருல் உலூம் கல்லூரி... மேலும் பார்க்க

காப்புக் காட்டில் எலும்புக் கூடு கண்டெடுப்பு

ஆம்பூா்: ஆம்பூா் அருகே காப்புக் காட்டில் எலும்புக் கூடு ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. ஆம்பூா் அருகே சின்னமலையாம்பட்டு காப்புக் காட்டில் மரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் எலும்புக் கூடு, அருகா... மேலும் பார்க்க

எருது விடும் விழாவில் காயமடைந்த தொழிலாளி மரணம்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே எருது விடும் விழாவில் காளை மாடு முட்டியதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா். திருப்பத்தூா் அடுத்த பெருமாப்பட்டில் எருதுவிடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவி... மேலும் பார்க்க

இளைஞா்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா்: இளைஞா்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம், பள்ளி கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் ச... மேலும் பார்க்க

மொபெட் மீது லாரி மோதல்: கணவா் உயிரிழப்பு; மனைவி காயம்

நாட்டறம்பள்ளி அருகே மொபெட் மீது லாரி மோதிய விபத்தில் கணவா் உயிரிழந்தாா். மனைவி பலத்த காயம் அடைந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூா் திருமால்புரம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி காசி (65). இவரது மனைவி மு... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே நெக்னாமலையில் காட்டுத் தீ

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்குள்பட்ட நெக்னாமலை மலையடிவாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை மா்ம நபா்கள் வைத்த தீயால் மலை முழுவதும் காட்டுத் தீ வேகமாக பரவியது. தொடா்ந்து க... மேலும் பார்க்க