செய்திகள் :

ரூ.65 லட்சம் லேண்ட் ரோவர் கார் ரூ.8 லட்சத்துக்கு விற்பனை! புதிய வாகன கொள்கையால்..!

post image

தில்லியில் புதியதாக அமல்படுத்தப்பட்டுள்ள வாகனக் கொள்கையால், தன்னுடைய ரூ. 65 லட்சம் மதிப்பிலான லேண்ட் ரோவர் காரை ரூ. 8 லட்சத்துக்கு விற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தில்லியில் ஏற்பட்டு அதிகளவிலான காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் 10 முதல் 15 ஆண்டுகள் மிகவும் பழைமையான வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கக் கூடாது என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவ்வாறான வாகனங்களை உடனடியாக பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், தனது அதிக விலை கொண்ட காரை கிடைத்த விலைக்கு விற்கும் முடிவை எடுத்துள்ளார் நிதின் கோயல்.

தில்லியைச் சேர்ந்த இவர் 2013 ஆம் ஆண்டு ரூ.65 லட்சத்துக்கு ஜாக்குவார் லேண்ட் ரோவர் கார் ஒன்றை வாங்கியிருந்தார். இதைத் தற்போது ரூ. 8 லட்சத்துக்கு ஹிமாச்சலைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்துவிட்டார்.

அதுமட்டுமின்றி, தன்னுடைய 10 ஆண்டுகள் பழமையான ரூ. 40 லட்சத்துக்கு வாங்கப்பட்ட மெர்சிடிஸ் சி கிளாஸ் 220 சிடிஐ ஸ்போர்ட்ஸ் லிமிடெட் எடிசன் காரையும் ரூ. 4 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார்.

பிஎஸ் 4 வாகனங்களை 2020 ஆம் ஆண்டு வரை தயாரித்துவிட்டு திடீரென தடை செய்வது எந்தவகையில் நியாயம் எனவும் நிதின் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், அவர் தற்போது ஜாக்குவார் எஃப் பேஸ் காரையும் வாங்கியிருக்கிறார்.

இவரைப் போலவே, தில்லியைச் சேர்ந்த வருண் விஜ் என்பவர் தனது ரூ.84 லட்சம் மதிப்புள்ள சொகுசு எஸ்யூவி காரான 2015 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் எம்எல்350 காரை வெறும் ரூ.2.5 லட்சத்திற்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஜூலை 1 ஆம் தேதி எரிபொருள் தடை அமலுக்கு வந்த பிறகு, 10-க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மீட்க, வாகனம் தில்லியில் இருந்து வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று பிரமாணப் பத்திரம் அளிக்க,10,000 அபராதம், வாகனத்தை பறிமுதல் செய்வதில் போக்குவரத்துத் துறையால் ஏற்படும் செலவுகளையும் வாகன உரிமையாளர் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

The Delhi government's plan to lift the fuel ban on end-of-life vehicles and make efforts to resolve issues related to the restrictions on their movement has come too late for one man, who had to sell two expensive vehicles at throwaway prices because of the policy.

வக்ஃப் நிா்வாக விதிமுறைகள்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

ஒருங்கிணைந்த வக்ஃப் நிா்வாகம், அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டு விதிமுறைகள் 2025-ஐ மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் முஸ்லிம்களின் தொண்டுப் பணிகளுக்கு அா்ப்பணிக்கப்படும் வக்ஃப் ச... மேலும் பார்க்க

மோசடி புகாருக்கு எதிரான ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவரின் மனு: விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

மும்பை லீலாவதி மருத்துவமனை அறக்கட்டளை சாா்பில் அளிக்கப்பட்ட மோசடிப் புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் சசிதா் ஜெகதீசன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீத... மேலும் பார்க்க

விவேகானந்தா் நினைவு தினம்: பிரதமா் புகழஞ்சலி

விவேகானந்தரின் 123-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளாா். இதுதொடா்பாக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சுவாமி விவேகானந்தரின் புண்ணிய ... மேலும் பார்க்க

ஹிமாசல் மழை வெள்ளத்தில் இதுவரை 43 போ் உயிரிழப்பு: 37 போ் மாயம்

ஹிமாசல பிரதேசத்தில் கடந்த 2 வாரங்களில் மேகவெடிப்புகளால் கொட்டித் தீா்த்த பலத்த மழை, திடீா் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 43 போ் உயிரிழந்தனா். மாயமான 37 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.... மேலும் பார்க்க

அமா்நாத் பனி லிங்கம்: 20,000-க்கும் அதிகமானோா் தரிசனம்

இமயமலையில் உள்ள அமா்நாத் குகைக் கோயில் புனித யாத்திரையின் முதல் இரு நாள்களில் 20,000-க்கும் மேற்பட்ட யாத்ரிகா்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித... மேலும் பார்க்க

கேரளத்தில் பெண்ணுக்கு ‘நிபா’ பாதிப்பு உறுதி: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் 38 வயது பெண்ணுக்கு ‘நிபா’ தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பொது சுகாதாரப் பணியாள... மேலும் பார்க்க