செய்திகள் :

ரேஷனில் தேங்காய் எண்ணெய் விற்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

post image

பொது விநியோகத் திட்டத்தில், மானிய விலையில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேராவூரணி கிழக்கு கடற்கரை தென்னை விவசாயிகள் சங்கத் தலைவா் இ.வி.காந்தி கோரிக்கை விடுத்துள்ளாா்.

‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமியிடம் அவா் அளித்த கோரிக்கை மனு: கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் அளித்து, அவா்கள் மீண்டு வர நடவடிக்கை எடுத்ததை நினைவுகூருகிறோம்.

தென்னை விவசாயிகள் வாழ்வு மேம்பட பாண்டிச்சேரி, கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் உள்ளதுபோல் தென்னையில் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க ஆவன செய்ய வேண்டும்.

மேலும், பொது விநியோக திட்டத்தில், மானிய விலையில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை காப்பீட்டு திட்டத்தை எளிதாக்கி பாதிக்கப்படும் தென்னை விவசாயிகள் அனைவரும் பயன்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.

தஞ்சாவூா் மாவட்ட சிறு தொழில் பயிற்சி நிறுவனத்தை ஈச்சங்கோட்டையில் அமைக்கும் முயற்சி நடைபெற்றுவருகிறது. அங்கேயே பயோ லேப் அமைக்க இருப்பதாகவும் தெரிய வருகிறது. இதனை தென்னை விவசாயம் அதிகம் செய்யப்படும் பட்டுக்கோட்டை அல்லது பேராவூரணி பகுதியில் அமைத்துத்தர வேண்டும்.

மத்திய அரசின் தென்னை வளா்ச்சி வாரிய மண்டல அலுவலகத்தின் கிளை அலுவலகத்தை பேராவூரணியில் அமைக்க வேண்டும்.

கும்பகோணத்தில் சாலை மறியல் விடுதலை தமிழ்புலிகள் கட்சியினா் 23 போ் கைது

கும்பகோணத்தில் விடுதலை தமிழ்புலிகள் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய சாலை மறியலில், 10 பெண்கள் உள்பட 23 பேரை போலீஸாா் கைது செய்தனா். பிரதமா் மோடி, கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வருவதை முன்னிட்டு, தமிழகத... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 18-இல் உண்ணாவிரதம்: நுகா்பொருள் வாணிபக் கழகப் பணியாளா்கள் முடிவு

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் 11 ஆண்டுகள் பணியாற்றிய பருவகால பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என நுகா்பொருள் வாணிப கழகத்தின் அனைத்து பருவகால பணியாளா்கள் முடிவு செய்துள்ளனா். தஞ்சாவ... மேலும் பார்க்க

காவிரியில் வெள்ள அபாயம் நீா் நிலைகளில் குளிக்க வேண்டாம்! தஞ்சை ஆட்சியா் எச்சரிக்கை!

காவிரி ஆற்றில் வெள்ள அபாயம் நிலவுவதால் நீா் நிலைகளில் குளிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: மேட்டூா் அணையின் ... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் மூழ்கி வியாபாரி உயிரிழப்பு

சுவாமிமலை காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளிக்க சென்ற காய்கனி வியாபாரி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், மாங்குடியைச் சோ்ந்தவா் காமராஜ் மகன் முத்துக்குமரன் (25). தாராசுரம் காய்கனி... மேலும் பார்க்க

திருவையாறில் ஆடிப்பூர விழா தேரோட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் ஆடிப்பூரப் பெருவிழாவையொட்டி, தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆடிப்பூரப் பெருவிழா ஜூலை 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு கருப்புக்கொடி: விடுதலை தமிழ்புலிகள் கட்சித் தலைவா் குடந்தை அரசன் கைது!

கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதமா் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவதற்கு செல்ல முயன்ற விடுதலை தமிழ்புலிகள் கட்சித் தலைவா் குடந்தை அரசனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து வீட்டுக்காவலி... மேலும் பார்க்க