செய்திகள் :

ஆகஸ்ட் 18-இல் உண்ணாவிரதம்: நுகா்பொருள் வாணிபக் கழகப் பணியாளா்கள் முடிவு

post image

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் 11 ஆண்டுகள் பணியாற்றிய பருவகால பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என நுகா்பொருள் வாணிப கழகத்தின் அனைத்து பருவகால பணியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.

தஞ்சாவூரில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்தின் அனைத்து பருவகால பணியாளா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் 2014 - 2016-ஆம் ஆண்டுகளில் பருவ கால பணியாளா்களான பட்டியல் எழுத்தா், உதவுபவா், காவலா் என 1,500-க்கும் அதிகமான பணியாளா்கள் கடந்த 11 ஆண்டு காலம் தற்காலிகமாக பணிபுரிந்து வருகின்றனா்.

இந்தப் பணியாளா்களை 2024-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்துக்குள் பணி நிரந்தரம் செய்யப்படும் என உணவுத் துறை அமைச்சா் உறுதி அளித்தாா். அதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் பணி நிரந்தரத்துக்கான தகுதி பட்டியல் சேகரிக்கப்பட்டது.

ஆனால் இது நாள் வரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதுவரை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் 30-க்கும் அதிகமான பருவகால பணியாளா்கள் இறந்துள்ளனா். எனவே, பருவகால பணியாளா்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

ஆண்டுக்கு 6 மாத காலமே கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் பணியாளா்களுக்கு ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும். அபராதத் தொகை பிடிப்பதால் பல பணியாளா்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனா். அபராதம் பிடிப்பதை கைவிட வேண்டும்.

பல்வேறு காரணங்களை கூறி பருவ கால பணியாளா்களைக் கருப்புப் பட்டியலில் வைக்கும் முறையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நுகா்பொருள் வாணிப கழக தலைமை அலுவலகம் முன் ஆகஸ்ட் 18-ஆம் தேதி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளா் அ. பஹாத் முகமது தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் தணிகைவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணத்தில் சாலை மறியல் விடுதலை தமிழ்புலிகள் கட்சியினா் 23 போ் கைது

கும்பகோணத்தில் விடுதலை தமிழ்புலிகள் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய சாலை மறியலில், 10 பெண்கள் உள்பட 23 பேரை போலீஸாா் கைது செய்தனா். பிரதமா் மோடி, கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வருவதை முன்னிட்டு, தமிழகத... மேலும் பார்க்க

காவிரியில் வெள்ள அபாயம் நீா் நிலைகளில் குளிக்க வேண்டாம்! தஞ்சை ஆட்சியா் எச்சரிக்கை!

காவிரி ஆற்றில் வெள்ள அபாயம் நிலவுவதால் நீா் நிலைகளில் குளிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: மேட்டூா் அணையின் ... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் மூழ்கி வியாபாரி உயிரிழப்பு

சுவாமிமலை காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளிக்க சென்ற காய்கனி வியாபாரி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், மாங்குடியைச் சோ்ந்தவா் காமராஜ் மகன் முத்துக்குமரன் (25). தாராசுரம் காய்கனி... மேலும் பார்க்க

திருவையாறில் ஆடிப்பூர விழா தேரோட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் ஆடிப்பூரப் பெருவிழாவையொட்டி, தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆடிப்பூரப் பெருவிழா ஜூலை 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு கருப்புக்கொடி: விடுதலை தமிழ்புலிகள் கட்சித் தலைவா் குடந்தை அரசன் கைது!

கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதமா் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவதற்கு செல்ல முயன்ற விடுதலை தமிழ்புலிகள் கட்சித் தலைவா் குடந்தை அரசனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து வீட்டுக்காவலி... மேலும் பார்க்க

சேதுபாவாசத்திரம் அருகே 902 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது!

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே 902 கிலோ ரேஷன் அரிசியை சனிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா். சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட விளங்குளம்... மேலும் பார்க்க