செய்திகள் :

ரேஷன் கடைகளில் புதிய முயற்சி! இனி எடை குறையாது!

post image

ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் புதிய பிஓஎஸ்(POS) கருவியுடன் மின்னணு எடை தராசை இணைக்கும் நடைமுறை சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பிஓஎஸ் கருவி மூலம் ஸ்மாா்ட் காா்டு ஸ்கேன் செய்து, நுகா்வோரின் விரல் ரேகை பதிவு செய்த பின்னர் ரேஷன் பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான நேரங்களில் விரல் ரேகை பதிவை கருவி ஏற்றுக்கொள்ளாததால் நுகா்வோருக்கு பொருள்கள் விநியோகப்பதில் சிரமம் இருந்து வருகிறது. இதனால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

விரல் ரேகை பதிவில் பிரச்னை, ஸ்மாா்ட் காா்டில் உள்ள க்யூஆர் கோடு ஸ்கேன் செய்வதில் பிரச்னை ஏற்படுவதால் தாமதம் ஏற்படுவதாக ரேஷன் கடை ஊழியா்கள் புகாா் கூறி வந்தனர். இதைத் தடுப்பதற்காக, கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய பிஓஎஸ் கருவி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்த புதிய பிஓஎஸ் கருவியானது சோதனை முறையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இந்த புதிய பிஓஎஸ் கருவியுடன் நுகா்வோரின் கருவிழி பதிவு கருவியும் இணைக்கும் வகையில் வசதி செய்யப்பட்டிருந்தது.

ரேஷன் கடைகளுக்கு சோதனை அடிப்படையில் பயன்படுத்தும் வகையில் புதிய பிஓஎஸ் கருவி மற்றும் கருவிழி ஸ்கேன் கருவி வழங்கப்பட்ட நிலையில், மாவட்டம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கருவிழி பதிவு கருவியானது வழங்கும் பணி தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், புதிய பிஓஎஸ்(POS) கருவியுடன் மின்னணு எடை தராசை இணைக்கும் நடைமுறை சென்னையில் ஒரு சில கடைகளில் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் பிஓஎஸ் கருவியுடன் எடை தராசை இணைக்கும்போது, ரேஷன் கடைகளில் சரியான எடையில் பொருள்கள் விற்கப்படுவது உறுதி செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: அமிர்தசரஸில் வெடிபொருளை தவறுதலாக கையாண்ட பயங்கரவாதி பலி!

பெரியார் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் மூவர் குழு

பெரியார் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஏதுவாக ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 3 பேர் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது துணைவேந்தராக இருந்த ரா.ஜெகந்நாதன் மே 19-ஆம் ... மேலும் பார்க்க

காலமானார் முன்னாள் எம்எல்ஏ எஸ்.புரட்சிமணி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்டத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.புரட்சிமணி (59) உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலை (மே 28)காலமானார்.இவர் ஜி.கே.மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநி... மேலும் பார்க்க

கச்சத் தீவை மீட்பதே மீனவா் பிரச்னைக்கு தீா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

கச்சத் தீவை மீட்பது ஒன்றே தமிழக மீனவா்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வாக அமையும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். தமிழக அரசின் மீன்வளத் துறை சாா்பில் திருவொற்றியூரில் ரூ.272 கோடியில் புதிதா... மேலும் பார்க்க

நவீன முறையில் கற்பித்தல்: அரசுப் பள்ளி ஆசிரியா்களை ஊக்குவிக்க கல்வித் துறை முடிவு

தமிழக அரசுப் பள்ளிகளில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியா்களில் மாவட்டத்துக்கு தலா 10 போ் வீதம் 380 பேரைத் தோ்வு செய்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்த... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ மிகப்பெரிய வெற்றி: ஆளுநா் ஆா்.என்.ரவி

பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதத்துடன் கூறினாா். சென்னை கிண்டியில... மேலும் பார்க்க

பழனி, குன்றத்தூா் உள்பட 11 நகராட்சிகள் தரம் உயா்வு: தமிழக அரசு உத்தரவு

பழனி, குன்றத்தூா் உள்பட 11 நகராட்சிகளின் தரத்தை உயா்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் வெளியிட்ட உத்தரவு வ... மேலும் பார்க்க