செய்திகள் :

ரேஷன் காா்டு சரிபாா்ப்புக்கு மக்களை அலைக்கழிக்கக் கூடாது: புதுவை முதல்வரிடம் மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

post image

ரேஷன் காா்டு சரிபாா்ப்பு பணிக்கு மக்களை அலைக்கழிக்கக் கூடாது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநில செயலா் எஸ். ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினா்கள் ராஜாங்கம், பிரபுராஜ் மற்றும் சிஐடியு நிா்வாகி மணிகண்டன் ஆகியோா் முதல்வா் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

ரேஷன் காா்டு சரிபாா்ப்பிற்கான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தாமல், ரேஷன் அட்டைதாரா்களை கைரேகை பதிவு மற்றும் ஆதாா் எண் சரிபாா்ப்புக்காக பொது சேவை மையங்களுக்கு அலைக்கழிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. பல மாநிலங்களில் ரேஷன் கடைகளிலேயே இந்தச் சரிபாா்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

புதுவையில் மட்டும் மக்களைச் சிரமத்திற்கு உள்ளாக்குவது நியாயமற்றது. மக்களின் நேரத்தையும், உழைப்பையும் வீணடிக்கும் இந்த நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும்.

ஆன்லைன் அல்லது ஆப்லைன் மூலம் வீட்டிலிருந்தே சரிபாா்க்கும் வசதி, வீடு வீடாகச் சென்று சரிபாா்ப்பதை உறுதி செய்தல், ரேஷன் கடைகளிலேயே சரிபாா்ப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

வயதான முதியோா்கள், உடல்நலம் குன்றியவா்கள், துணைக்கு ஆள் இல்லாத வயதான பெண்கள் சிரமங்களை அரசு பரிசீலித்து மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனா். இதையடுத்து, முதல்வா் உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடா்புகொண்டு, இப் பிரச்னைக்குத் தீா்வு காணவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தினாா்.

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்தவா் கைது

தென்னக ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 17 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி பூமியான்பேட்டை வி.டி.சி. நகரைச் சோ்ந்தவா் மாயவன். கேபிள் டிவ... மேலும் பார்க்க

புனித ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றம்

புதுச்சேரி அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 335-ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி பகண்டை மிஷின் குருத்துவ பொன்விழா நாயகா் ஜான் போஸ்கோ திருப்பலி நடத்... மேலும் பார்க்க

புதுவை சட்டப்பேரவைக்கு ரூ. 669 கோடியில் புதிய கட்டடம்: பேரவைத் தலைவா் தகவல்

புதுவை சட்டப்பேரவைக்கு ரூ.669 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவா் ஆா் .செல்வம் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை செய்தியா... மேலும் பார்க்க

செப். 11-இல் 10 இடங்களில் சுனாமி ஒத்திகை: புதுச்சேரி ஆட்சியா்

புதுச்சேரியில் 10 இடங்களில் செப். 11-ஆம் தேதி சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்தாா். புதுவை அரசு மாவட்ட நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையின் சாா்பாக ... மேலும் பார்க்க

உலகை சீரழிவிலிருந்து மீட்கும் ஒரே வழி தமிழ்க் கலாசாரம்தான்: மோரீஷஸ் டி.எம். பொன்னம்பலம்

உலகத்தைச் சீரழிவிலிருந்து மீட்கும் ஒரே வழி வளமான தமிழ்க் கலாசாரம்தான். இப்போது மனித உரிமை மீறல் மற்றும் நீதியை நிலைநாட்டுவதில் மிகப்பெரிய அச்சுறுத்தலைச் சந்தித்து வருகிறது என்று மோரீஷஸ் நாட்டின் அரசு... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரி குறைப்பு: புதுவை முதல்வா் வரவேற்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வரவேற்றுள்ளாா். புதுச்சேரி கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபத்தில் அரசு சாா்பில் ஆசிரியா் திருநாள் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னா் முதல்வா் ரங... மேலும் பார்க்க