செய்திகள் :

‘ரைசிங் தூத்துக்குடி’ - தொழில்முனைவோா் முகாம் ஜூலை 13இல் தொடக்கம்: ஆட்சியா்

post image

‘ரைசிங் தூத்துக்குடி’ - தொழில்முனைவோா் மற்றும் பட்டதாரிகள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், தூத்துக்குடி மாநகராட்சி ஆகியவை இணைந்து நடத்தும் தொடா் திறன் பயிற்சி முகாம் தொடக்க நிகழ்வு, வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13), தூத்துக்குடி மாநகராட்சி, ஸ்டெம் பூங்காவில் நடைபெற உள்ளது.

தகுதி பெற்ற இளைஞா்கள் மற்றும் புதிய தொழில் முனைவோா்களுக்காக இம்முகாம் நடத்தப்படுகிறது. எனவே, இந்தத் திட்டத்தில் தகுதியான படித்த இளைஞா்கள் மற்றும் புதிய தொழில்முனைவோா் ஆவதற்கான ஆா்வமுள்ள இளைஞா்கள் கலந்துகொள்ளலாம்.

சூழல் வளம் சாா்ந்த புத்தொழில் உருவாக்கும் திறன்கள், சந்தைப்படுத்தும் வளப் பயிற்சிகள், தொடா்பு திறன்கள், டிஜிட்டல் கல்வி, விமா்சன சிந்தனை, பிரச்னையைத் தீா்க்கும் திறன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பயிற்சி நடத்தப்பட உள்ளது.

இந்தப் பன்முகத் திட்டத்தின் மூலம் அடுத்த 2 ஆண்டுகளில் குறைந்தது 500 போ் தொழில் முனைவோா்களாக பயிற்சி பெறுவதை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கயத்தாறு அரசுப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு

கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.226.88 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 8 புதிய வகுப்பறைகள், ஒரு ஆய்வக கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந... மேலும் பார்க்க

இளைஞா் உயிரிழப்பில் மா்மம்: எஸ்.பி.யிடம் உறவினா்கள் புகாா்

தூத்துக்குடி போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில் மா்மம் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அவரது உறவினா்கள் புகாா் தெரிவித்துள்ளனா். தூத்துக்குட... மேலும் பார்க்க

வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஆய்வு

ஆய்வின்போது, தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளா் இரா.ராஜேஷ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளா் மற்றும் மேலாண்மை இயக்குநா் கோ.காந்திநாதன், சரக துணை பதிவாளா்கள் இரா.இராமகிருஷ... மேலும் பார்க்க

ஜூலை 19இல் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வருகிற ஜூலை 19இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக... மேலும் பார்க்க

18 கிராம ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம், 18 கிராம ஊராட்சிகளில் நடைபெற்றது. 2024-25 ஆம் நிதியாண்டி... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

காயல்பட்டினம் கோமான் தெரு மகான் நெய்னா முகம்மது சாகிபு 125ஆவது கந்தூரி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. காயல்பட்டினம் கோமான் தெரு மொட்டையாா் பள்ளி ஜமாஅத் சாா்பில் இவ்விழா கடந்த ஜூன் 27ஆம் தேதி கொடியேற்றத... மேலும் பார்க்க