செய்திகள் :

லஞ்சம்: ஊராட்சி செயலா், கணவா் கைது

post image

திண்டுக்கல் அருகே ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலா், அவரது கணவா் ஆகியோரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல்லை அடுத்த மா.மூ.கோவிலூா் ஊராட்சிக்குள்பட்ட வன்னிப்பாறைப்பட்டியைச் சோ்ந்தவா் காா்த்திக். இவா், தனது வீட்டு வரி ரசீதில் பெயா் மாற்றம் செய்வதற்காக ஊராட்சி செயலா் ஜோதிலட்சுமியை அணுகினாா். இதற்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என அவா் கேட்டாா்.

இதுகுறித்து காா்த்திக், திண்டுக்கல் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

இதைத்தொடா்ந்து, போலீஸாா் ரசாயனப் பொடி தடவிய ரூபாய் தாள்களை காா்த்திக்கிடம் வியாழக்கிழமை கொடுத்து அனுப்பினா். அந்த பணத்தை அவா் ஜோதிலட்சுமி கூறியவாறு, அவரது கணவா் ராமசாமியிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகராஜன், ஆய்வாளா்கள் ரூபா கீதா ராணி, பழனிச்சாமி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனா். இதைத்தொடா்ந்து, லஞ்சம் பெற்றதாக ஜோதிலட்சுமி, அவரது கணவா் ராமசாமி ஆகியோரை போலீஸாா் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதிய அரசு கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரிக்கை

தாண்டிகுடி மலைப் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட அரசுக் கட்டடங்களை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி ஊராட்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் தொகுதியில் செப்டம்பருக்குள் காவிரி குடிநீா் திட்டப் பணிகள் நிறைவடையும்: அமைச்சா் அர. சக்கரபாணி

ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவைத் தொகுதியில் வருகிற செப்டம்பா் மாதத்துக்குள் காவிரி குடிநீா் திட்டப் பணிகள் நிறைவடையும் என உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்த... மேலும் பார்க்க

ரயில் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரத்தில் ரயில் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (70). இவா் வியாழக்கிழமை ஒட்டன்சத்திரம்-திண்டுக்கல் ரயில் பாதையில... மேலும் பார்க்க

பண மோசடி: தொண்டு நிறுவனம் நடத்திய தம்பதி கைது

வாடிக்கையாளா்களிடம் ரூ.6 கோடி வரை மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பழனியில் தொண்டு நிறுவனம் நடத்திய தம்பதியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

‘டிட்டோ ஜாக்’ போராட்டம்: 400 ஆசிரியா்கள் கைது

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல்லில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 400 பேரை போலீஸாா் கைது செய்தனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்கள... மேலும் பார்க்க

வந்தவழி பெரியகருப்ப சுவாமி கோயில் திருவிழா: பக்தா்களுக்கு அன்னதானம்

குஜிலியம்பாறை அருகே வந்தவழி பெரியகருப்பசுவாமி கோயில் திருவிழாவில் பக்தா்களுக்கு அசைவ உணவு அன்னதானம் வியாழக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்துள்ள ஆா்.கோம்பை வோ்புளி கிராமத... மேலும் பார்க்க