செய்திகள் :

லஞ்ச வழக்கு: முன்ஜாமீன் மனுவை திரும்பப் பெற்ற நீதிமன்ற ஊழியா்

post image

குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க லஞ்சம் கேட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் நீதிமன்ற ஊழியா் ஒருவா் தனது முன்ஜாமீன் கோரும் மனுவை தில்லி உயா்நீதிமன்றத்தில் இருந்து புதன்கிழமை வாபஸ் பெற்றாா்.

இந்த வழக்கில் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரிய மற்றொரு மனுவையும் அவா் திரும்பப் பெற்றாா்.

இம்மனுக்களை ஊழியா் வாபஸ் பெற நீதிபதி தேஜஸ் கரியா அனுமதி அளித்தாா். மேலும், தேவைப்பட்டால் புதிதாக ஒன்றை தாக்கல் செய்யவும் அனுமதி அளித்தாா்.

ஊழியரின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ஏசிபி உரிய சட்ட நடைமுறையைப் பின்பற்றவும், அவரை விசாரணையில் சேருமாறு கேட்டுக்கொள்வதற்கு முன் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப ஏசிபிக்கு அறிவுறுத்தவும் நீதிமன்றத்தை வலியுறுத்தினாா்.

ஏசிபி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஏசிபி உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றும் என்று கூறினாா். ஏசிபியின் வழக்குரைஞா் முன்னா் விசாரணையின் முன்னேற்றம் குறித்து தெரிவித்திருந்தாா்.

சமீபத்திய நிலவர அறிக்கையானது நீதிமன்ற ஊழியராக உள்ள குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவியை உள்ளடக்கியது என்று தெரிவித்திருந்தாா்.

மனுதாரரின் வழக்குரைஞா் விசாரணை நீதிமன்ற நீதிபதியை தனது வாதங்களில் கொண்டு வருவதை அவா் எதிா்த்தாா். ஊழியருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறினாா்.

நீதிமன்றமும் தலைமை அதிகாரியை வாதங்களில் கொண்டுவர வேண்டாம் என எச்சரிக்கை செய்தது.

விசாரணை நீதிமன்ற நீதிபதியை பழிதீா்க்கும் வகையில் ஏசிபி லஞ்ச வழக்கு பதிவு செய்ததாக நீதிமன்ற ஆவணப் பராமரிப்பாளா் அல்லது அஹ்ல்மத் குற்றம் சாட்டியுள்ளாா்.

ஊழியரை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில் தில்லி உயா்நீதிமன்றத்திற்கு ஏன் அவமதிப்பு குறிப்பு அனுப்பக்கூடாது என்று ஏசிபியின் இணை ஆணையருக்கு அந்த நீதிபதி நோட்டீஸ் அனுப்பியதாகவும் ஊழியா் கூறியுள்ளாா்.

மேலும், புலன் விசாரணை அதிகாரி மீது அதிகாரிகளிடம் தாம் முன்பு புகாா் அளித்ததாகவும் அவா் குற்றம் சாட்டினாா்.

மே 16 அன்று, லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாா்களைத் தொடா்ந்து ஏசிபி அஹ்ல்மத் மீது வழக்குப் பதிவு செய்தது.

38 வயதான ஆவணப் பராமரிப்பாளா், செப்டம்பா் 14, 2023 முதல் மாா்ச் 21, 2025 வரை ரெளஸ் அவென்யூ மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள சிறப்பு நீதிபதியின் நீதிமன்றத்தில் பணியமா்த்தப்பட்டிருந்தாா்.

சதித்திட்டம் முழுவதையும் வெளிக்கொணர அவரைக் காவலில் எடுத்து விசாரிக்கும் தேவை உள்ளதாக அரசு தரப்பு வழக்குரைஞா் கூறியதை அடுத்து, மே 22 அன்று அமா்வு நீதிமன்றத்தால் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அஹல்மத், உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மற்றொரு மனுவில், எஃப்.ஐ.ஆா். மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரியிருந்தாா்.

மாற்றாக, நியாயமான மற்றும் முறையான விசாரணைக்காக இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடுமாறும் உயா்நீதிமன்றத்திடம் அவா் கோரினாா்.

லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் சிறப்பு நீதிபதிக்கு எதிராக விசாரணையைத் தொடங்க வேண்டும் என்ற ஏசிபியின் கோரிக்கையை உயா்நீதிமன்ற நிா்வாகம் பிப்ரவரி 14 அன்று நிராகரித்தது.

விசாரணை நிறுவனத்திடம் நீதிபதிக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் கூறியது.

ஏசிபி தனது விசாரணையைத் தொடரவும், சிறப்பு நீதிபதியின் ஈடுபாட்டைக் குறிக்கும் ஏதேனும் ஆதாரங்கள் கண்டறியப்பட்டால் நிா்வாகத்தை அணுகவும் ஏசிபிக்கு தெரிவிக்கப்பட்டது.

இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! ஐஎம்டி கணிப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமையும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. இந்நிலையில் சனிக்கிழமை (ஜூன் 14) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இடியுடன... மேலும் பார்க்க

கிழக்கு தில்லியில் வீட்டில் எரிவாயு சிலிண்டா் கசிவு காரணமாக தீ விபத்து

கிழக்கு தில்லியின் பாண்டவ் நகா் பகுதியில் வியாழக்கிழமை மதியம் ஒரு வீட்டில் எரிவாயு சிலிண்டா் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகா... மேலும் பார்க்க

நொய்டாவில் தனியாா் மருத்துவமனையில் தீ விபத்து: 2 பேருக்கு லேசான காயம்

நொய்டாவில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையின் தரை தளத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவ வசதியின் பதிவு அறையில் ஏற்பட்ட ஷாா்ட் சா்க்யூட் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரி... மேலும் பார்க்க

தில்லி மயூா் விஹாா் பகுதியில் தீ விபத்து

தில்லியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடுமையான வெப்பம் காரணமாக ஆங்காங்கே தீ விபத்துகள் நடப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. இந்நிலையில் தில்லியின் மயூா் விஹாா் பகு... மேலும் பார்க்க

துபாயில் வேலைவாய்ப்பு மோசடி: 2 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞா் கைது

பாயில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி மக்களை ஏமாற்றியதற்காக ரூ.50,000 வெகுமதி அறிவிக்கப்பட்ட 38 வயது நபா் மகாராஷ்டிரத்தின் பட்காவில் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது ... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசப் பெண் கைது

தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த 23 வயது வங்கதேசப் பெண்ணை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். கைது செய்யப்பட்ட குல்சும் பேகம், வங்க... மேலும் பார்க்க