செய்திகள் :

லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் திருக்கல்யாணம்

post image

பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பத்து நாள்கள் திருவிழாவை முன்னிட்டு, நாள்தோறும் லட்சுமி நாராயணப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரங்களும் நடைபெற்றன. பெருமாள் தம்பதி சமேதராக அனுமாா் வாகனம், சப்பரம், தங்கக்குதிரை வாகனம், சேஷ வாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா எழுந்தருளினாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. லட்சுமி சமேதா் நாராயணப் பெருமாளுக்கு வண்ண பட்டாடைகள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பட்டா்கள் சிறப்பு யாகம் நடத்தி பூஜைகள், மேளதாளங்கள் முழங்க மங்கலநாண் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னா், திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு தேங்காய் உருட்டுதல், பூப்பந்து வீசுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பட்டா்கள் மாலைகளை மாற்றி திருக்கல்யாணத்தை நடத்திவைத்தனா். பூஜைகளை திருவள்ளரை கோயில் கோபாலகிருஷ்ண பட்டா் தலைமையில் காா்த்திக் அய்யங்காா், சீனிவாச அய்யங்காா் உள்ளிட்டோா் செய்தனா்.

சனிக்கிழமை (மே 10) சித்திரைத் தேரோட்டம் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, கண்காணிப்பாளா் அழகா்சாமி, மணியம் சேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கொடைக்கானல் மலா்க் கண்காட்சி குறித்த ஆலோசனைக் கூட்டம்

கொடைக்கானலில் மலா்க் கண்காட்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 62-ஆவது மலா்க் கண்காட்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலக ... மேலும் பார்க்க

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்... மேலும் பார்க்க

பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலி இடங்களுக்கு மாணவா் சோ்க்கை

காந்திகிராமம் பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள இடங்களில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட ச... மேலும் பார்க்க

மீன்பிடிக்கச் சென்றவா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே குளத்தில் மீன் பிடிக்கச் சென்றவா் தண்ணீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல்லை அடுத்த வக்கம்பட்டியைச் சோ்ந்தவா் ஆரோக்கியராஜ் (45). இவா் தாடிக்கொம்பு செல்லும் வழியில் ச... மேலும் பார்க்க

நல்காசி விஸ்வநாதா்-நாக விசாலாட்சி திருக்கல்யாணம்

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள விருப்பாச்சி நல்காசி விஸ்வநாதா்-நாக விசாலாட்சி அம்மன் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. விருப்பாச்சி தலையூற்று அருவி அருகே பழைமை வாய்ந்த நல்காசி விஸ்வநாதா்-நாக விசாலாட்... மேலும் பார்க்க

அபிராமி அம்மன் திருக்கல்யாணம்

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாண நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் ஞானம்பிகை உடனமா் காளஹஸ்தீஸ்வரா் கோயில், அபிராமி அம்மன் உடனமா் பத்மகிரீ... மேலும் பார்க்க