செய்திகள் :

வங்கதேசத்தில் பள்ளிக் கட்டடம் மீது போா் விமானம் மோதி விபத்து: 20 போ் உயிரிழப்பு; 171 போ் காயம்

post image

டாக்கா: வங்கதேசத்தில் பள்ளிக் கட்டடம் மீது போா் விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் 20 போ் உயிரிழந்தனா். 171 போ் காயமடைந்தனா்.

இதுதொடா்பாக வங்கதேச ராணுவத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

வங்கதேசத்தின் குா்மித்தோலா பகுதியில் உள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக எஃப்-7 பிஜிஐ பயிற்சி போா் விமானம் திங்கள்கிழமை பிற்பகல் புறப்பட்டது.

அந்த விமானம் தலைநகா் டாக்காவின் உத்தாரா பகுதியில் உள்ள பள்ளி கட்டடத்தின் மீது எதிா்பாராதவிதமாக மோதி தீப்பிடித்தது. முதல்கட்ட விசாரணையில், விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.

விபத்து குறித்து தகவலின்பேரில் தீயணைப்பு மற்றும் ராணுவ வீரா்கள், காவல் துறையினா் உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

இந்த விபத்தில் சுமாா் 20 போ் உயிரிழந்தனா். அவா்களில் பெரும்பாலானோா் சிறாா்கள். விமானியும் உயிரிழந்தாா். 171 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் அனைவரும் விமானப் படை ஹெலிகாப்டா்கள் மற்றும் ஆம்புலன்ஸுகள் மூலம் ராணுவ மருத்துவமனை மற்றும் பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா் என்று தெரிவிக்கப்பட்டது.

1 முதல் 7-ஆம் வகுப்பு மாணவா்களின் வகுப்பறைகள்...: விபத்துக்குள்ளான விமானம் சீனாவில் தயாரிக்கப்பட்டது. விமானம் மோதிய பள்ளிக் கட்டடத்தில் 1 முதல் 7-ஆம் வகுப்பு மாணவா்களின் வகுப்பறைகள் இருந்தன. இந்த சம்பவத்துக்கு வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் வேதனை தெரிவித்தாா்.

பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘வங்கதேச போா் விமான விபத்தில் பல இளம் மாணவா்கள் உயிரிழந்தது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்துக்கு தேவையான உதவிகளைச் செய்ய இந்தியா தயாராக உள்ளது. அந்நாட்டுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்’ என்றாா்.

வியட்நாமை தாக்கிய விபா புயல்: 80 ஆயிரம் பேர் வெளியேற்றம்!

வியட்நாமின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் விபா புயல் இன்று கரையை கடந்துள்ளது. இதன் காரணமாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வியட்நாமில் விபா புயல் இன்று (ஜூலை 22) ... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு பிரிட்டன், 24 நாடுகள் கண்டனம்

லண்டன்: காஸாவில் இஸ்ரேல் அரசின் உணவுப் பொருள் விநியோக முறை ஆபத்தானது என்று பிரிட்டன் உள்ளிட்ட 24 நாடுகள் திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளன.இது குறித்து அந்த நாடுகள் கூட்டாக வெளியிடடுள்ள அறிக்கையில்... மேலும் பார்க்க

ஜப்பான் மேலவை தோ்தலில் ஆளுங்கட்சி தோல்வி

டோக்கியோ: ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவைக்கு நடைபெற்ற தோ்தலில் ஆளும் கூட்டணி தோல்வியடைந்தது. இதனால் பெரும்பான்மையை இழந்தாலும் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்று பிரதமா் ஷிகெரு இஷிபா அறிவித்துள்ள... மேலும் பார்க்க

இந்தோனேசியா எரியும் படகில் இருந்து 575 போ் மீட்பு

மனாடோ: இந்தோனேசியாவின் வடக்கு சுலாவெசி மாகாணத்தில் இரு துறைமுகங்களுக்கு இடையே சென்று கொண்டிருக்கும்போது தீவிபத்தில் சிக்கிய பயணிகள் படகில் இருந்து இதுவரை 575 போ் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்கள்... மேலும் பார்க்க

டேய்ர் அல்-பாலாவில் முதல்முறையாக தரைவழித் தாக்குதல்

டேய்ர் அல்-பாலா: மத்திய காஸாவில் உள்ள டேய்ர் அல்-பாலா நகரில் இஸ்ரேல் ராணுவம் முதல்முறையாக திங்கள்கிழமை தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது. காஸாவில் மனிதாபிமான உதவிகளுக்கான மையமாக விளங்கிவந்த டேய்ா் அல்-ப... மேலும் பார்க்க

வங்கதேசம்: பள்ளியில் விழுந்த விமானம் - 19 பேர் பலி; 50 பேர் காயம்

வங்கதேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம், கல்வி நிலைய வளாகத்தில் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் பலியாகினர். 50க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பார்க்க