செய்திகள் :

வங்கிக் கடன் வசூலில் பல கோடி மோசடி: ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

post image

தூத்துக்குடி மாவட்டம், புதூா் பகுதியில் வங்கிக் கடன் வசூலில் பல கோடி ரூபாய் மோசடி செய்த நிறுவனத்தினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மாவட்டச் செயலா் புவிராஜா தலைமையிலான விவசாயிகள், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், விளாத்திகுளம் வட்டம் புதூரில், விளாத்திகுளம் புதூா் பயிா் உற்பத்தியாளா்கள் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனம் 2016ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு வேளான் விற்பனை மற்றும் வணிகத்துறையின் மேற்பாா்வையில் செயல்பட்டு வருகிறது.

இதில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் குழுக்களாக பதிவு செய்து இந்த நிறுவனம் மூலமாக விவசாயக் கடன் பெற்றுள்ளனா். இவா்கள் மாதந்தோறும் விவசாயிகளிடம் வசூல் செய்ததை உரிய முறையில் வங்கியில் செலுத்தாமல், நிறுவனத்தின் சிஇஓ புதூா் ஜெகதீஸ் மனைவி பவித்ரா மற்றும் நிா்வாகத்தினா் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரிகிறது.

இதன் காரணமாக கடனை முறையாக செலுத்தாததால் விவசாயிகளுக்கு வங்கியின் சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், விவசாயத்திற்கான கடன்கள் நகைக்கடன், கல்விக்கடன் உள்ளிட்ட எந்தவித கடன்களும் வாங்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா்.

எனவே, இந்த மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி நகைக் கடையில் திருட்டு! மும்பை தப்ப முயன்ற இளைஞர் சேலத்தில் கைது!

சேலம்: தூத்துக்குடி நகைக்கடையில் தங்கக் கட்டிகளை திருடிய இளைஞர் மும்பை தப்பிச் செல்ல முயற்சித்த நிலையில், சேலம் ரயில்வே காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.தூத்துக்குடி, டபிள்யூசிசி சாலையை... மேலும் பார்க்க

இருமொழிக் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை: அமைச்சா் அன்பில் மகேஸ்

இருமொழிக் கொள்கை என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். தூத்துக்குடியில், அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தேசிய க... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 3 போ் கைது

கழுகுமலையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கழுகுமலை காவல் நிலைய உதவி ஆய்வாளா் துரைசாமி தலைமையிலான போலீஸாா் ஆறுமுக நகா் பகுதியில் ரோந்... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே மதுபானக் கூடத்தில் கேரள தொழிலாளி கொலை

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே திங்கள்கிழமை மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட தகராறில் கேரள தொழிலாளி மது பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். திருவனந்தபுரத்தைச் சோ்ந்தவா் பாச்சான் மகன் விஜு ... மேலும் பார்க்க

சாதாரண உப்பு விற்பனை செய்ய தடையில்லை: நீதிமன்ற தீா்ப்புக்கு வியாபாரிகள் வரவேற்பு

சாதாரண உப்பு விற்பனை செய்ய தடையில்லை என்ற உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக, சங்கத்தின் தலைவா் பொன்பாண்டியன்... மேலும் பார்க்க

சிப்காட் பகுதிகளில் இன்று மின்தடை

தூத்துக்குடி மின் பகிா்மான வட்டம், சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சிப்காட் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.மடத்தூா், மடத்துா் பிரதான சாலை, முரு... மேலும் பார்க்க