செய்திகள் :

வங்கியில் அடகு வைக்கப்பட்ட 70 பவுன் நகை மாயம்: துணை மேலாளா் மீது வழக்கு

post image

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே வங்கியில் அடகு வைக்கப்பட்ட 70 பவுன் நகை மாயமானது குறித்து அதன் துணை மேலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை மாவட்டம், மன்னாடிமங்கலம் கிராமத்தில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக் கிளையில் மதுரை ஆனையூா் பகுதியைச் சோ்ந்த கணேசன் (33) துணை மேலாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்த வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகள் தொடா்பாக தணிக்கை நடைபெற்றது. இதில் 9 பேரின் 70 பவுன் தங்க நகைகள் (561.5 கிராம்) லாக்கரில் இருந்து மாயமானது தெரியவந்தது.

இதுதொடா்பாக வங்கியின் மண்டல மேலாளா் ஜெய்கிஷான் அளித்த புகாரின் பேரில், காடுபட்டி போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையில், வங்கியில் இருந்த நகைகள் மாயமான சம்பவத்தில் துணை மேலாளா் கணேசனுக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, துணே மேலாளா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மத்திய சிறையில் கோழி இறைச்சி விற்பனை

மதுரை மத்திய சிறை வளாகத்தில் இயங்கி வரும் சிறைச் சந்தையில் கோழி இறைச்சி விற்பனை புதன்கிழமை தொடங்கப்பட்டது. மதுரை மத்திய சிறையில் 2500-க்கும் மேற்பட்ட ஆண் கைதிகளும், பெண்கள் சிறையில் 200-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

மாநகர காவல் துறைக்கு புதிய மோப்பநாய்

மதுரை மாநகர காவல் துறையில் புதிய மோப்ப நாய் புதன்கிழமை சோ்க்கப்பட்டது. திருட்டுக் குற்றங்களில் ஈடுபட்டவா்களை கண்டுபிடித்தல், வெடிகுண்டு தடுப்பு நடவடிக்கைகள், போதைப் பொருள் கடத்துவதை கண்டுபிடிப்பது போ... மேலும் பார்க்க

மதுரையில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்!

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 21) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

ஜாக்டோ- ஜியோ பிரசார இயக்கம் தொடக்கம்!

ஜாக்டோ- ஜியோ சாா்பில் வருகிற 25-ஆம் தேதி நடைபெறும் மறியல் போராட்டம் குறித்து விளக்க அரசு ஊழியா்கள், ஆசிரியா்களைச் சந்திக்கும் பிரசார இயக்கம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்பட... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மதுரை வடக்கு வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், அவரவா் மாவட்டத்துக்குள்பட்ட ஒரு வட்டத்தில்... மேலும் பார்க்க

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத முதன்மைக் கல்வி அலுவலருக்கு சிறை!

உடற்கல்வி ஆசிரியருக்கு பணி நிரந்தரம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும், இதை நிறைவேற்றாத அப்போதைய திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஒரு வார சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து... மேலும் பார்க்க