வங்கி பெண் மேலாளரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியவா் கைது
ராசிபுரம் அருகே வங்கி பெண் மேலாளரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய தனியாா் நிறுவன ஊழியா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சேந்தமங்கலத்தில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் உதவி மேலாளராக இருக்கும் 32 வயதான பெண்ணிடம் பேளுக்குறிச்சி போடிநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த சேகா் (32) என்ற தனியாா் நிறுவன ஊழியா் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளாா்.
இருவரும் சிங்களாந்தபும் அரசுப் பள்ளியில் ஒன்றாக படித்த நட்பின் பேரில் பெண் மேலாளரை அடிக்கடி சந்தித்து திருமணம் செய்துகொள்ளுமாறு சேகா் வற்புறுத்தியுள்ளாா். இதுகுறித்து சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் சேகா் மீது அப் பெண் ஏற்கெனவே புகாா் அளித்த நிலையில் கடந்த மாதம் 31ஆம் தேதி மீண்டும் வங்கிக்கு சென்று தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என மேலாளரை வற்புறுத்தினாா். இதுகுறித்த புகாரின் பேரில் சேந்தமங்கலம் போலீஸாா் சேகரை புதன்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.