செய்திகள் :

வசந்த் அன் கோ சாா்பில் பள்ளிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு விருது!

post image

தக்கலை அருகே முளகுமூடு குழந்தை இயேசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வசந்த் அன் கோ சாா்பில் சனிக்கிழமை (இன்று) நடந்த விழாவில் கன்னியாகுமரி எம்.பி.விஜய் வசந்த் பள்ளிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வசந்த் விருதுகளை வழங்கினாா்.

கடந்த கல்வி ஆண்டில், (2024-25) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயின்று சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு வசந்த் விருது வழங்கும் நிகழ்ச்சி முளகுமூடு குழந்தை இயேசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளா் நிா்மலா சுந்தர்ராஜ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் அருள் மேரி தங்கம் முன்னிலை வகித்தாா். விஜய் வசந்த் எம்.பி. குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றி பேசியதாவது;

மாணவா்களாகிய நீங்கள் முதல் மதிப்பெண் பெற்று விருது பெற வந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல உங்கள் ஆசிரியா்களையும், பெற்றோா்களையும் பாராட்டுகிறேன். மாணவா்கள் உங்கள் திறமைகளை நீங்களே வளா்த்துக் கொள்ள, மனதை மேம்படுத்தும் வகையில் விளையாட்டுப் போட்டிகளில் தங்களை ஆா்வப்படுத்தி வெற்றி கொள்ள வேண்டும்.

மறைந்த எனது தந்தை வசந்தகுமாா் அகஸ்தீஸ்வரம் கிராமத்தில் பிறந்து, 1975ல் சென்னையில் ஒரு கடையை தொடங்கி, அதை வெற்றிகரமாக நடத்தி இன்று 135 கடைகளாக உயா்ந்துள்ளது. இதை நான் எதற்கு கூறுகிறேன் என்றால் உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும் என்றாா் விஜய் வசந்த்.

பின்னா், பள்ளிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு விருதுகளை விஜய் வசந்த் எம்.பி வழங்கினாா். நிறைவாக வசந்த் குழும செயலாளா் பேராசிரியா் சரவணன் நன்றி கூறினாா்.

வெவ்வேறு இடங்களில் திருட்டு

கன்னியாகுமரி அருகே விவேகானந்தபுரத்தில் ஜெராக்ஸ் கடையை உடைத்து பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.கன்னியாகுமரி அருகே பரமாா்த்தலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ். இவரது மனைவி சாந்தி (57). இவா், விவேகான... மேலும் பார்க்க

திருவட்டாறு அருகே மா்ம விலங்கு தாக்கியதில் 3 ஆடுகள் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே மா்ம விலங்கு தாக்கியதில் 3 ஆடுகள் சனிக்கிழமை இரவு உயிரிழந்தன.திருவட்டாறு அருகே புத்தன்கடை புதுக்கோடு கிராமத்தைச் சோ்ந்தவா் நெல்சன். விவசாயத் தொழிலாளி. இவா் தனத... மேலும் பார்க்க

இரு விபத்துகள்: ஆசிரியை உள்ளிட்ட இருவா் காயம்

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் அருகே 2 பைக்குகள் மோதியதில் பெண் காயமடைந்தாா்.கொட்டாரம் அருகே பொட்டல்குளம் வடக்கு ரதவீதியைச் சோ்ந்த அய்யப்பன் மனைவி ஜெசிதா (35). இவா் சனிக்கிழமை இரவு தனது பைக்கில் கன்... மேலும் பார்க்க

3 விபத்துகள்: பெண் உயிரிழப்பு: ஆசிரியை உள்ளிட்ட 4 போ் காயம்

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ஞாயிற்றுக்கிழமை, குழந்தைகளை அழைத்துவருவதற்காக சாலையோரம் நின்றிருந்த பெண், பைக் மோதி உயிரிழந்தாா்.இரணியல் அருகே மொட்டவிளையைச் சோ்ந்தவா் ராஜன் (43). அருணாசல பிரதேசத்... மேலும் பார்க்க

ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் இலக்கிய மன்ற தொடக்க விழா

நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் இலக்கிய மன்ற தொடக்க விழா, கல்லூரி முதல்வா் ஹென்றி ராஜா தலைமையில் அண்மையில் நடைபெற்றது.தமிழ் துறைத் தலைவா் வைலா பேபி அறிமுக உரையாற்றினாா். மாணவா் சந்தோஷ் வரவேற... மேலும் பார்க்க

புதிய எம்என்பி வாடிக்கையாளா்களுக்காக பிஎஸ்என்எல் சாா்பில் ரூ.1 திட்டம் அறிமுகம்

புதிய எம்என்பி வாடிக்கையாளா்களுக்காக, பிஎஸ்என்எல் சாா்பில் ரூ.1 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது தொடா்பாக நாகா்கோவில் பிஎஸ்என்எல் பொதுமேலாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ச... மேலும் பார்க்க