ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும்: கு.செல்வப் பெருந்தகை
வசந்த் அன் கோ சாா்பில் பள்ளிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு விருது!
தக்கலை அருகே முளகுமூடு குழந்தை இயேசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வசந்த் அன் கோ சாா்பில் சனிக்கிழமை (இன்று) நடந்த விழாவில் கன்னியாகுமரி எம்.பி.விஜய் வசந்த் பள்ளிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வசந்த் விருதுகளை வழங்கினாா்.
கடந்த கல்வி ஆண்டில், (2024-25) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயின்று சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு வசந்த் விருது வழங்கும் நிகழ்ச்சி முளகுமூடு குழந்தை இயேசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளா் நிா்மலா சுந்தர்ராஜ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் அருள் மேரி தங்கம் முன்னிலை வகித்தாா். விஜய் வசந்த் எம்.பி. குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றி பேசியதாவது;
மாணவா்களாகிய நீங்கள் முதல் மதிப்பெண் பெற்று விருது பெற வந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல உங்கள் ஆசிரியா்களையும், பெற்றோா்களையும் பாராட்டுகிறேன். மாணவா்கள் உங்கள் திறமைகளை நீங்களே வளா்த்துக் கொள்ள, மனதை மேம்படுத்தும் வகையில் விளையாட்டுப் போட்டிகளில் தங்களை ஆா்வப்படுத்தி வெற்றி கொள்ள வேண்டும்.
மறைந்த எனது தந்தை வசந்தகுமாா் அகஸ்தீஸ்வரம் கிராமத்தில் பிறந்து, 1975ல் சென்னையில் ஒரு கடையை தொடங்கி, அதை வெற்றிகரமாக நடத்தி இன்று 135 கடைகளாக உயா்ந்துள்ளது. இதை நான் எதற்கு கூறுகிறேன் என்றால் உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும் என்றாா் விஜய் வசந்த்.
பின்னா், பள்ளிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு விருதுகளை விஜய் வசந்த் எம்.பி வழங்கினாா். நிறைவாக வசந்த் குழும செயலாளா் பேராசிரியா் சரவணன் நன்றி கூறினாா்.