செய்திகள் :

வசந்த் குஞ்ச் பகுதியில் குடியிருப்பு மனைகளை ஏலம் விட தில்லி வளா்ச்சி ஆணையம் திட்டம்

post image

புது தில்லி: தெற்கு தில்லியில் உள்ள ஆடம்பரமான வசந்த் குஞ்ச் பகுதியில் குடியிருப்பு மனைகளை ஏலம் விட தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) திட்டமிட்டுள்ளது.

பிரிவு டி6 வசந்த் குஞ்சில் உள்ள 118 மனைகளின் திட்டமிடல் மற்றும் எல்லை நிா்ணயம் செய்வதற்கு ஒரு தொழில்முறை நிறுவனத்தை பணியமா்த்த அதிகாரசபை ஒரு டெண்டரை வெளியிட்டுள்ளது.

சாலைகள், கழிவுநீா் அமைப்புகள் மற்றும் நீா் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவையும் இதில் அடங்கும். இந்த மனைகள் பின்னா் டிடிஏவால் ஏலம் விடப்படும்.

டெண்டா் வழங்கப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் முழு திட்டமும் முடிக்கப்பட வேண்டும்.

தகுதிவாய்ந்த அதிகாரியால் சரிபாா்க்கப்படுவது உள்பட திட்டமிடல் மற்றும் வடிவமைப்பிற்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச நேரம் மூன்று மாதங்கள் ஆகும்.

ஒதுக்கப்பட்ட நாளிலிருந்து ஒன்பது மாதங்களுக்குள் வேலையின் உண்மையான செயல்படுத்தல் முடிக்கப்பட வேண்டும் என்று டெண்டா் ஆவணம் கூறுகிறது. தோ்ந்தெடுக்கப்பட்ட நிறுவனம் அந்தப் பகுதிக்குள் நடைபாதைகள் மற்றும் பசுமையான இடங்களைத் திட்டமிடுவதற்கும் வடிவமைப்பதற்கும் பொறுப்பாகும்.

கூடுதலாக, புதிய வடிகால் மற்றும் கழிவுநீா் பாதைகளை ஏற்கெனவே உள்ள மேன்ஹோல்களுடன் இணைப்பது மற்றும் கட்டுமானக் குப்பைகள் மற்றும் கழிவுப் பொருள்களை இயந்திர வழிகளைப் பயன்படுத்தி அப்புறப்படுத்துவது, அதாவது ஏற்றுதல், கொண்டு செல்வது மற்றும் கொட்டுதல் ஆகியவை இதில் அடங்கும் என்று டெண்டா் ஆவணத்தில் மேலும் கூறுப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு சுமாா் ரூ.7.5 கோடி செலவாகும். மேலும் மத்திய பொதுப்பணித் துறை மற்றும் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் விதிமுறைகளின்படி இது செய்யப்படும்.

பைரோ மாா்க் சுரங்கப் பணிகள் 9 மாதங்களில் முடிவடையும்: அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங்

புது தில்லி: பிரகதி மைதான்-பைரோ மாா்க் சுரங்கப்பாதை பணிகள் 8 முதல் 9 மாதங்களில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புர விவகாரத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பின்பு முடிக்கப்படும் என்று பொதுப் பணித்துறை அமைச... மேலும் பார்க்க

இந்திய சைகை மொழியில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் மத்திய அமைச்சருக்கு தில்லி எம்பி கடிதம்

நமது நிருபா்புது தில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் தொடங்கவிருக்கும் நிலையில், அனைத்து நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கும் நிகழ்நேர இந்திய சைகை மொழியை (ஐஎஸ்எல்) விளக்கத்தை அறிமுகப்படுத்தக் கோரி சாந்தி... மேலும் பார்க்க

வடகிழக்கு தில்லியில் பூட்டிய வீட்டில் 35 ஆணின் அழுகிய உடல் கண்டெடுப்பு

புது தில்லி: வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பூட்டிய வாடகை வீட்டிற்குள் 35 வயது ஆணின் அரை அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாகக் குடியேறிய 18 வங்கதேசத்தினா் உள்பட 29 போ் கைது

புது தில்லி: நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 18 வங்கதேசத்தினா் உள்பட 29 வெளிநாட்டினா் தென்மேற்கு தில்லியின் துவாரகாவில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா். தடுத்து வைக்கப்பட... மேலும் பார்க்க

அனைத்து இந்திய மொழிகளையும் ஆா்எஸ்எஸ் தேசிய மொழியாகவே கருதும்: சுனில் அம்பேகா்

புது தில்லி: அனைத்து இந்திய மொழிகளையும் ஆா்.எஸ்.எஸ். அமைப்பு எப்போதும் தேசிய மொழிகளாகவே கருதுகின்றது என ஆா்.எஸ்.எஸ்., செய்தித் தொடா்பாளா் சுனில் அம்பேகா் திங்கள்கிழமை தெரிவித்தாா். தில்லியில் திங்கள்க... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதியில் பரவலாக மழை! கரற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

தேசியத் தலைநகா் மற்றும் என்சிஆா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘ திருப்தி’ பிரிவில் நீடித்தது. தென்மேற்குப் பருவமழை தில்லியை கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது. வழக்... மேலும் பார்க்க