ஒடிசா: கூட்டு பாலியல் வன்கொடுமை; கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; 7 பேர் கைது
வடகாடு பகுதியில் நாளை மின்தடை
ஆலங்குடி அருகே வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் ஜூன் 18 (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். குமாரவேல் வெளியிட்டுள்ள அறிக்கை: வடகாடு துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூா், சூரன்விடுதி உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 18 (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.