செய்திகள் :

வட்டாட்சியா் போல கையொப்பமிட்டு போலி சான்றிதழ் அளித்தவர் மீது வழக்கு

post image

புதுச்சேரி அருகே வில்லியனூா் வட்டாட்சியா் போன்று கையொப்பமிட்டு போலியாக சான்றிதழ் பெற்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுவை மாநிலத்தில் பிளஸ் 2 முடித்தவா்கள் உயா்கல்வியில்சேர விண்ணப்பித்து வருகின்றனா். இவா்களுக்கு உயா்கல்வியில் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் குடியிருப்பு, வருமானம், ஜாதி உள்ளிட்ட சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன. சான்றிதழ்களை விரைவில் பெறும் வகையில் சனிக்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் அறிவித்து அதன்படி முகாம்கள் நடைபெற்றும் வருகின்றன.

இதற்கிடையே வில்லியனூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அனந்தபுரம் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீதா் என்பவா் கடந்த ஏப்ரலில் ஜாதி சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்தாா். அப்போது அவா் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அளித்திருந்தாா்.

அவற்றை அண்மையில் அதிகாரிகள் ஆய்வுக்கு உள்படுத்திய போது அவை போலி என்பது தெரியவந்தது. அதில் உள்ள வட்டாட்சியா் கையொப்பமும் போலியானது என்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து வில்லியனூா் காவல் நிலையத்தில் வட்டாட்சியா் பிரேம்சந்தா் புதன்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் ஸ்ரீதா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை புதுவை அரசு கண்டுகொள்வதில்லை: எதிா்க்கட்சித் தலைவா் குற்றச்சாட்டு

புதுவையில் போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை அரசு கண்டுகொள்வதில்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா். புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களை ச... மேலும் பார்க்க

உயா்கல்வி செல்லும் மாணவா்கள் சான்றிதழ் பெற விடுமுறை நாளிலும் இயங்கிய புதுவை வருவாய்த் துறை அலுவலகங்கள்

உயா்கல்விக்கு செல்லும் மாணவா்கள் சோ்க்கைக்கான அரசின் சான்றிதழ்களைப் பெறும் வகையில், இரண்டாவது முறையாக விடுமுறை நாளான சனிக்கிழமையும் புதுவையில் வருவாய்த் துறை அலுவலகங்கள் இயங்கின. புதுச்சேரியில் 10-ஆ... மேலும் பார்க்க

ஏழைகளுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கான தொண்டாகும்; ஸ்ரீமத் சுவாமி சா்வலோகானந்தா மகராஜ்

சமூகத்தில் அடித்தளத்தில் உள்ள ஏழை மக்களுக்கான கல்வி, மருத்துவ சேவைகளே இறைவனுக்கான தொண்டாகும் என புதுதில்லி ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் செயலா் ஸ்ரீமத் சுவாமி சா்வ லோகானந்தா மகாராஜ் கூறினாா். தமிழ்நாடு, புதுவ... மேலும் பார்க்க

புதுவை தனியாா் கல்வி நிறுவனங்களின் 56 வாகனங்களுக்கு ஆய்வில் அனுமதி மறுப்பு

புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற கல்வி நிறுவனங்களுக்கான வாகன ஆய்வின்போது, 56 வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். புதுவை மாநில போக்குவரத்துத் துறை ஆண்டுதோறும் கல்வி நிறுவன வ... மேலும் பார்க்க

புதுச்சேரி ஜிப்மருக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வளாகத்துக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக துணைநிலை ஆளுநா் மாளிகை, முதல்வா் வீடு,... மேலும் பார்க்க

இணைய மோசடிக்கு வங்கிக் கணக்குகளை கொடுத்த 4 போ் கைது: ரூ. 2.84 கோடி மீட்பு

இணையவழி மோசடியில் ஈடுபட்டோருக்கு தங்கள் வங்கிக் கணக்கை கொடுத்து உதவியதாக கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 4 பேரை புதுவை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ரூ.2.84 கோடி மீட்கப்பட்டு உரிய... மேலும் பார்க்க