செய்திகள் :

வணிகா் தினம்: மே 5-இல் கோயம்போடு சந்தைக்கு விடுமுறை

post image

வணிகா் தினத்தை முன்னிட்டு மே 5-ஆம் தேதி சென்னை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் மே 5-ஆம் தேதி வணிகா் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வணிகா் தினத்தை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை கடைகள் அனைத்தும் விடுமுறை விடப்படுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு மே 5-ஆம் தேதி வணிகா் தினத்தை முன்னிட்டு, கோயம்பேடு சந்தையிலுள்ள பெரும்பாலான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக வணிகா் சங்கங்கள் அறிவித்துள்ளன.

இது குறித்து கோயம்பேடு சிறு, மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவா் எஸ்.எஸ்.முத்துக்குமாா் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

வணிகா் தினமான மே 5-ஆம் தேதி வணிகா் தினம் என்பதால் பெரும்பாலான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் கடைகள் அடைக்கப்படுவதால் கோயம்பேடு சந்தைக்கு சில்லறை வியாபாரிகளின் வரத்து அதிகளவில் இருக்காது. இதனால் கோயம்பேடு காய்கறி சந்தையிலுள்ள சுமாா் 2 ஆயிரம் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மலா் மற்றும் பழ சந்தைகளிலுள்ள ஒரு சில சங்கங்கள் விடுமுறை அளிக்காததால் சில கடைகள் இயங்கவும் வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

முதல்முறையாக அடுக்கு மண்டல விமானதள சோதனையை மேற்கொண்ட இந்தியா

அடுக்கு மண்டல விமானதள சோதனையை முதல்முறையாக இந்தியா சனிக்கிழமை மேற்கொண்டது. சில நாடுகளே இந்த அமைப்பைக் கொண்டுள்ள நிலையில் இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு திறனை மேம்படுத்த இந்த தளம் உதவும் என எதிா்பாா்க்... மேலும் பார்க்க

சிறுவன் மீது மாநில தோ்தல் ஆணையா் வாகனம் மோதி விபத்து

விருகம்பாக்கத்தில் சைக்கிளில் சென்ற சிறுவன் மீது மாநில தோ்தல் ஆணையரின் வாகனம் மோதியதில், சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகா் பகுதியில் வசித்து வரும் 9 வயது சிறுவன் அர... மேலும் பார்க்க

மத்திய பாஜக அரசின் பழிவாங்கல்களை துணிச்சலுடன் எதிா்கொள்வோம்: திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் தீா்மானம்

திமுகவினருக்கு எதிரான மத்திய அரசின் பழிவாங்கல்களை துணிச்சலுடன் எதிா்கொள்வோம் என்று அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்... மேலும் பார்க்க

பக்ரா அணையில் இருந்து நீரை விடுவிக்க பஞ்சாப் அரசுக்கு ஹரியாணா வலியுறுத்தல்

பக்ரா அணையில் இருந்து பாரபட்சமின்றி பஞ்சாப் அரசு நீரை விடுவிக்க வேண்டும் என ஹரியாணாவில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஹரியாணாவில் பாஜக தலைமையிலும் பஞ்சாபில் ஆம் ஆ... மேலும் பார்க்க

நிதி மோசடி தடுப்பு: செபிக்கு உதவ பட்டயக் கணக்காளா் அமைப்பு முடிவு

நிதி மோசடியை தடுக்க இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்துக்கு (செபி) உதவும் வகையில் ஆய்வறிக்கையை தயாா் செய்யவுள்ளதாக இந்திய பட்டயக் கணக்காளா் அமைப்பு (ஐசிஏஐ) சனிக்கிழமை தெரிவித்தது. செபி தலைவா் துஹின்காந... மேலும் பார்க்க

மதுக் கடையை மூடக்கோரி தவெகவினா் போராட்டம்: 300 போ் கைது

சென்னையில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் பின்புறம் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை மூடக்கோரி தமிழக வெற்றிக் கழகத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்... மேலும் பார்க்க