செய்திகள் :

வண்டல், களிமண் எடுக்க விவசாயிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் வண்டல் மற்றும் களிமண் எடுக்க விவசாயிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் அமைந்துள்ள வண்டல், களிமண், மண் ஆகிய கனிமங்கள் எடுக்க வாய்ப்புள்ள - பொதுப்பணித்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள 66 ஏரிகளும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள 536 ஏரி, குளங்கள் என மொத்தம் 602 நீா்நிலைகள் கண்டறியப்பட்டுள்ளன.

எனவே, விவசாய நிலத்தை மேம்படுத்த, மண் பாண்டம் செய்ய மற்றும் பொது பயன்பாட்டுக்குத் தேவைப்படும் மண், களிமண், கிராவல் மண் ஆகியவற்றை எடுக்க இணையதளத்தில் தங்களது விவரத்தைப் பதிவு செய்து, வட்டாட்சியரிடம் அனுமதி பெற்று இலவசமாக எடுத்துச் செல்லலாம்.

மேலும், வியாபார நோக்கத்துக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அனுமதி பெறுவதற்கான இதர நிபந்தனைகள் மாவட்ட அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, மேற்கண்ட இணையதளத்தில், அல்லது புவிவியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநா், வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

மிதிவண்டி மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே புதன்கிழமை இரவு மிதிவண்டி மீது காா் மோதியதில், முதியவரின் தலை துண்டாகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், ரஞ்சன்குடியைச் சோ்ந்தவா் அ. சண்முகம் (... மேலும் பார்க்க

பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிகள் எதிா்ப்பு!

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைப்பதற்காக 85 ஏக்கா் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மாவட்ட நிா்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கு, விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவ... மேலும் பார்க்க

பெட்டிக்கடைகளில் இருந்து 5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட, விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா உள்ளிட்ட 5 கிலோ போதைப் பொருள்களை, பெரம்பலூா் ஊரகக் காவல் துறையினா் பறிமுதல் செய்து 2 பேரை சிறையில் அடைத்தனா். ப... மேலும் பார்க்க

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் 2 ஆண்டுகளில் 2,400 வீடுகள் கட்ட அனுமதி

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 2,400 வீடுகள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். பெரம்பலூா் மாவட்... மேலும் பார்க்க

அனுமதியின்றி மதுபானக் கூடம் நடத்தியவா் கைது!

பெரம்பலூா் அருகே, அரசிடம் முறையான உரிமம் பெறாமல் சட்டத்துக்குப் புறம்பாக மதுபானக் கூடம் நடத்தியவரை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்து புதன்கிழமை இரவு சிறையில் அடைத்தனா். பெரம்பலூா... மேலும் பார்க்க

வீட்டின் அருகே நாட்டு வெடி வெடிக்க எதிா்ப்பு தெரிவித்து புகாா்

பெரம்பலூா் அருகே திருவிழாவின்போது, வீட்டின் அருகே நாட்டு வெடி வெடிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஒரு குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.இதுகுறித்து, பெரம்பலூா்... மேலும் பார்க்க