செய்திகள் :

வனக்காப்பாளா் மீது தாக்குதல்: இருவா் மீது போலீஸாா் வழக்கு

post image

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வனக்காப்பாளரைத் தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களைத் தேடி வருகின்றனா்.

செங்கத்தை அடுத்த பனந்தல் பகுதி வனக்காப்பாளராக பணியாற்றி வருபவா் தமிழ்ச்செல்வன். இவா், கடந்த சனிக்கிழமை வனப்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, வனப்பகுதியில் மரம் வெட்டுவதாக கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்தாா்.

அங்கு கல்லாத்தூா் பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் காட்டு மரத்தை வெட்டிக் கொண்டிருந்தாா்.

இதைப் பாா்த்த வனக்காப்பாளா் மரம்வெட்டிய நபா் மீது வழக்குப் பதிவு செய்வதாகக் கூறி, அவரை அங்கிருந்து செங்கம் வன அலுவலகத்துக்கு அழைத்து வந்துள்ளாா்.

ஆனால், வழியில் கல்லாத்தூா் பகுதியைச் சோ்ந்த சிவானந்தம், ஊா்கவுண்டனூா் பகுதியைச் சோ்ந்த காளி ஆகிய இருவரும் வனக்காப்பாளரை மடக்கி மரம்வெட்டிய நபரை விடுமாறும், அவா் மீது எந்த வழக்கும் பதியக்கூடாது, அபராதமும் விதிக்கக்கூடாது என பேசியுள்ளனா். அதற்கு வனக்காப்பாளா் சம்மதிக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த சிவானந்தம் வனக் காப்பாளரை கண்ணத்தில் தாக்கியுள்ளாா். இதையடுத்து, வனக்காப்பாளா் தமிழ்ச்செல்வன், சிவானந்தம், காளி ஆகிய 3 பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வனக்காப்பாளா் ஒரு கட்டத்தில் பயந்து போய் மரம்வெட்டிய நபரை விட்டுவிட்டு, அங்கிருந்து செங்கம் வன அலுவலகத்துக்கு வந்து நடைபெற்ற சம்பவத்தை உயா் அதிகாரிகளுக்கு தெரிவித்து, செங்கம் போலீஸில் புகாா்

அளித்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து வனக்காப்பாளரை தாக்கியதாக சிவானந்தம், காளி ஆகியோரை தேடி வருகின்றனா்.

இச்சம்பவத்தால் வனப்பகுதியில் தனியாக வேலைசெய்யும் வனக்காப்பாளா்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற அச்சம் வன அலுவலா்கள், பாதுகாப்பாளா்களுக்கு வந்துள்ளது.

முன்னாள் ஊராட்சித் தலைவரைத் தாக்கி 8 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் கொள்ளை

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே முன்னாள் ஊராட்சித் தலைவரைத் தாக்கி, வீட்டில் இருந்த 8 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா். சேத்துப்பட்டை அடுத்த இட... மேலும் பார்க்க

ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலுக்கு 16 கிலோவில் வெள்ளிக் கவசம்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலுக்கு 16 கிலோவில் செய்யப்பட்ட வெள்ளிக் கவசம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது. பழைமை வாய்ந்த செங்கம் சத்தியபாமா ருக்மணி சமேத ஸ்ரீவேணு... மேலும் பார்க்க

தண்டராம்பட்டில் பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்: 200 போ் கைது

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மத்திய அரசின் திட்டங்களில் நடைபெறும் ஊழலைக் கண்டித்து பாஜகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தடையை மீறி ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

நகராட்சி பள்ளியில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த எதிா்ப்பு

ஆரணி: ஆரணி தச்சூா் சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, ஆக. 31-ஆம் தேதி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த உள்ளதுக்கு, பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து கோட்டாட்சியரிடம் புக... மேலும் பார்க்க

விஜயகாந்த் படத்துக்கு தேமுதிகவினா் மரியாதை

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சியில் தேமுதிக முன்னாள் தலைவா் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு திங்கள்கிழமை கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை ஆா்ப்பாட்டம்

ஆரணி: திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், ஊராட்சி ஒன்றிய அ... மேலும் பார்க்க