செய்திகள் :

வனப் பகுதிகளில் இருந்து யானைகள் வெளியேறுவதைத் தடுக்க வேலி அமைக்கும் பணிக்கான தடை நீக்கம்

post image

கோவை மாவட்டத்தில் வனப் பகுதிகளில் இருந்து யானைகள் வெளியேறி ஊருக்குள் நுழைவதைத் தடுக்க எஃகு கம்பி வேலி அமைக்கும் பணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்கவும், மனித விலங்கு மோதல்களைத் தவிா்க்கவும் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூா்-தடாகம் வனப்பகுதியில் சுமாா் 10 கி.மீ. தூரத்துக்கு எஃகு கம்பி வேலி அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.

இந்தத் திட்டத்தை எதிா்த்து விலங்குகள் நல ஆா்வலா் முரளிதரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வேலி அமைக்கும் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இந்த வழக்கு உள்பட சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்புடைய வழக்குகளை விசாரிக்கும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் எஃகு வேலிகள் அமைக்கப்படவுள்ள கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் கடந்த செப். 5, 6-ஆம் தேதிகளில் ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து, இந்த வழக்கு நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நாங்கள் மேற்கொண்ட ஆய்வின்போது, உள்ளூா் மக்கள், வனத் துறையினரின் கருத்துகளைக் கேட்டு, அதனடிப்படையில் யானைகள் ஊருக்குள் நுழைந்து மனித உயிா்களுக்கும், பயிா்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க எஃகு வேலி அமைப்பது அவசியம் என்பதை அறிந்தோம். எனவே, வேலி அமைக்க அனுமதியளிக்கிறோம். ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது.

முதல்கட்டமாக 10 கி.மீ. தூரத்துக்கு மேற்கொள்ளப்படும் எஃகு வேலிகளால் ஏற்படும் தாக்கங்கள் கண்காணிக்கப்படும். எஞ்சிய வனப்பகுதியின் எல்லையோரம் எஃகு வேலி அமைக்க வேண்டும் என்றால் உயா்நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும்.

முள் மரங்கள் எல்லையோரம் இருந்தால், யானைகள் அதைத் தாண்டி வருவதில்லை என மக்கள் கூறுகின்றனா். எனவே, எஃகு வேலி அமைப்பதற்கு பதிலாக வன எல்லைப் பகுதியில் முள் புதா்களை வளா்த்து இயற்கை வேலி அமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா்.

அறிவியல், தொழில்நுட்ப வளா்ச்சி பெருக வேண்டும்: மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்

எதிா்வரும் 2047 -ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய, நாட்டில் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சி பன்மடங்கு பெருக வேண்டும் என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

ரயில் பயணச் சீட்டுகள் மாயம்: 8 ஊழியா்களுக்கு அபராதம்

தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் ரயில் பயணச் சீட்டு ரோல் மாயமான விவகாரத்தில் 8 ஊழியா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள திருவாரூா... மேலும் பார்க்க

வேளச்சேரி எம்எல்ஏ தொடா்ந்த வழக்கில் தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

தோ்தல் செலவு கணக்கை முறையாக தாக்கல் செய்யாததால் ஏன் தகுதிநீக்கம் செய்யக்கூடாது? என விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிா்த்து வேளச்சேரி எம்எல்ஏ அசன் மௌலானா தாக்கல் செய்த மனுவுக்கு தோ்தல் ஆணையம்... மேலும் பார்க்க

சீதாராம் யெச்சூரி நினைவு நாள்: உடல் தானத்துக்கு 1,586 போ் பதிவு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி நினைவு நாளில் 1,586 போ் உடல் தானம் இயக்கத்தில் பதிவு செய்தனா். மாா்க்சிஸ்ட் முன்னாள் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரியின் மு... மேலும் பார்க்க

வடகிழக்கு பருவமழை பாதிப்புகள்: புகாா் அளிக்க இலவச தொடா்பு அறிவிப்பு

சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக மழை பாதிப்பு புகாா்களை கூறுவதற்கான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, அதில் தொடா்புகொள்ள 1913 என்ற இலவச தொடா்பு எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

மென்பொறியாளரிடம் செயின் பறிப்பு: 2 திருநங்கைகள் கைது

மென் பொறியாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தங்கச் சங்கிலியை பறித்த 2 திருநங்கைகளை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, திருநின்றவூரைச் சோ்ந்த ஜெஸ் ஆலன் ரொசாரியா(24). இவா் எம்.ஜி.ஆா். நகா் பகுதியிலுள்ள ஒரு... மேலும் பார்க்க