மாலத்தீவில் இந்தியா சாா்பில் ரூ.55 கோடியில் 13 நலத்திட்டங்கள்: புரிந்துணா்வு ஒப்...
வயநாடு: அனுமதி பெறாத தங்கும் விடுதி; பெண்ணின் தலையில் சரிந்த கூரை; சோகத்தில் முடிந்த சுற்றுலா
வயநாடு நிலச்சரிவு பேரழிவுக்குப் பிறகு சுற்றுலாத்துறையும் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது.
மீண்டும் சுற்றுலாவை மேம்படுத்த வயநாடு மாவட்ட நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போது கோடை சீசன் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

இந்த நிலையில், கேரள மாநிலத்தின் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளைச் சேர்ந்த 16 பேர் குழுவாக வயநாடு சுற்றுலா சென்றுள்ளனர்.
மேப்பாடி அருகில் உள்ள தொள்ளாயிரம் கண்டி பகுதியில் ஜிப் லைன், கண்ணாடி பாலம் எனக் கவர்ந்திழுக்கும் வகையில் இயங்கி வந்த தனியார் தங்கும் விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர்.
தங்கும் விடுதி வளாகத்தில் புற்களால் கூரை வேயப்பட்ட குடிலைத் தேர்வு செய்து தங்கியிருக்கிறார் பெண் ஒருவர்.
இரவு தூங்கிக் கொண்டிருந்த வேளையில் அந்த பெண் மீது கூரைப் பெயர்ந்து விழுந்திருக்கிறது. காயத்துடன் தவித்த அந்தப் பெண்ணை மீட்டு மேப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்துள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக 2 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்துத் தெரிவித்துள்ள வயநாடு காவல்துறையினர், "மலப்புரம் பகுதியைச் சேர்ந்த நிஷ்மா என்கிற 24 பெண் தங்கியிருந்த குடிலின் கூரை அவர் மீதே சரிந்து விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
காவல்துறை மற்றும் ஊராட்சி தரப்பில் விசாரணை மேற்கொண்டதில் முறையான அனுமதி இல்லாமல் அந்த தங்கும் விடுதி செயல்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
விடுதி மேலாளர் சுசீந்திரன், மேற்பார்வையாளர் அனுராக் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுத் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.

இது குறித்துத் தெரிவித்துள்ள வயநாடு காவல்துறையினர், "மலப்புரம் பகுதியைச் சேர்ந்த நிஷ்மா என்கிற 24 பெண் தங்கியிருந்த குடிலின் கூரை அவர் மீதே சரிந்து விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
காவல்துறை மற்றும் ஊராட்சி தரப்பில் விசாரணை மேற்கொண்டதில் முறையான அனுமதி இல்லாமல் அந்த தங்கும் விடுதி செயல்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
விடுதி மேலாளர் சுசீந்திரன், மேற்பார்வையாளர் அனுராக் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுத் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs