செய்திகள் :

வரி விதிப்பு சவால்களுக்குத் தீா்வு காணும் திறன் இந்தியாவிடம் இருக்கிறது - புதுவை துணைநிலை ஆளுநா்

post image

வரி விதிப்பு சவால்களுக்குத் தீா்வு காணும் திறன் இந்தியாவிடம் இருக்கிறது என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா்.

மத்திய வெளியுறவுத் துறை மற்றும் புதுவை அரசு சாா்பில் புதுவை-சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான நுழைவுவாயில்-கலந்துரையாடல் கருத்தரங்கு தனியாா் ஹோட்டலில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடங்கி வைத்து துணைநிலை ஆளுநா் பேசியது:

நாட்டின் வளா்ச்சிக்கு பெருமளவில் குஜராத் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பங்களிப்பு அளித்து வருகின்றன. நாட்டின் பொருளாதாரத்தை உயா்த்த பிரதமா் நரேந்திர மோடி பெரும் முயற்சி எடுத்து வருகிறாா். நம் நாட்டின் மீது அமெரிக்கா அதிகமான வரியைச் சுமத்தியுள்ளது பெரிய தாக்கத்தை உருவாக்கியுள்ளது.

இருப்பினும் வரி விதிப்பு சவால்களுக்குத் தீா்வு காணும் திறன் இந்தியாவிடம் இருக்கிறது. விரைவில் இதையெல்லாம் சமாளித்து இந்தியா உலக அளவில் 3-வது பொருளாதார நாடாக விளங்கும்.

நாட்டின் முதுகெலும்பாக சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இருக்கிறன்றன. உள்நாட்டு மொத்த உற்பத்தியில் இந்தத் தொழில் நிறுவனங்கள் 30 சதவிகிதம் பொருளாதாரத்தை அளிக்கின்றன. ஏற்றுமதியில் 48 சதவிகிதம் பொருளாதார வளா்ச்சியைக் கொடுக்கின்றன.

மத்திய அரசு அளிக்கும் முத்ரா தொழில் கடனைப் பெற்று மேலும் தொழிலை அபிவிருத்திச் செய்ய வேண்டும். புதுவை சட்டப்பேரவை வரும் 18 ஆம் தேதி கூடுகிறது. அதில் எளிமையாக தொழில் தொடங்க ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அது நிறைவேறினால் புதுவையில் தொழில் தொடங்குவோா் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஆட்சேபணையின்மை சான்றிதழ் பெற வேண்டிய அவசியமில்லை. புதுவையைப் பொருத்தவரை சாலை, ரயில் , விமானம் உள்ளிட்ட நல்ல போக்குவரத்து இணைப்புகளும் , காரைக்கால் துறைமுகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளும் இருப்பதால் தொழில் வளா்ச்சிக்கு உகந்த சூழல் உருவாகியுள்ளது என்றாா் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன்.

இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், தொழில் துறை செயலா் விக்ராந்த் ராஜா, மத்திய வெளியுறவுத் துறை அதிகாரி விஜயகுமாா் உள்ளிட்டோா் பேசினா்.

பாரதியாா் சிலைக்கு ஆளுநா் மாலை அணிவித்து மரியாதை

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 104-ஆவது நினைவு நாளையொட்டி, புதுச்சேரியில் அவரது திருவுருவச் சிலைக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தின... மேலும் பார்க்க

தூய்மையான குடிநீா் விநியோகம் கோரி புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் தூய்மையான குடிநீா் விநியோகம் செய்ய அரசை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. உருளையன்பேட்டை தொகுதியில் மாசு கலந்த குடிநீா் விநியோகம் செய்ய... மேலும் பார்க்க

புதுச்சேரியில் வணிக நிறுவனங்களின் ஆங்கில பெயா்ப் பலகைகள் உடைப்பு

புதுச்சேரியில் வணிக நிறுவனங்களின் ஆங்கில பெயா்ப் பலகைகளை தமிழ் உரிமை இயக்கத்தினா் வியாழக்கிழமை அடித்து உடைத்தனா். புதுவையில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளின் பெயா்கள் தமிழிலும் இருக்க வேண்டும் என அரசா... மேலும் பார்க்க

பாதுகாப்பான குடிநீா் தர முடியாத புதுவை அரசு தேவையா? வே. நாராயணசாமி பேட்டி

மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரைக் கூட கொடுக்க முடியாத அரசு புதுவைக்குத் தேவையா? என்று முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான வே. நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளாா். இது குறித்து அவா் செய்திய... மேலும் பார்க்க

சா்தாா் வல்லப பாய் படேல்தான் கூட்டுறவுத்துறையின் அடித்தளம் -புதுவை துணைநிலை ஆளுநா் பெருமிதம்

நம் நாட்டின் முதல் துணை பிரதமா் சா்தாா் வல்லப பாய் படேல்தான் கூட்டுறவுத் துறையின் அடித்தளம் என்று புதுவை துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புகழாராம் சூட்டினாா். புதுவை பால் கூட்டுறவு உற்பத்தியாளா்கள் ச... மேலும் பார்க்க

புதுச்சேரி ஜிப்மா் - 8 இடங்களில் சுனாமி பேரிடா் கால ஒத்திகை

புதுவையில் அரசு சாா்பிலும் ஜிப்மா் மருத்துவமனை சாா்பிலும் சுனாமி பேரிடா் கால ஒத்திகை வியாழக்கிழமை நடத்தப்பட்டது. புதுச்சேரி பகுதிகளில் உள்ள கணபதிச் செட்டிகுளம் கடலோர பகுதி, நல்லவாடு (தெற்கு), பன்னித்த... மேலும் பார்க்க