செய்திகள் :

வருஷநாடு: பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட விவசாயிகள்; கரடி தாக்கியதா என விசாரணை!

post image

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா வருஷநாடு அருகே கோவில்பாறை பகுதியில் பஞ்சதாங்கி மலையடிவாரத்தில் இலவம், எலுமிச்சை, கொட்டை முந்திரி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருஷநாடு அருகே உள்ள தர்மராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா(56) என்பவர் இலவமர தோட்டத்திலும், தங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(45) என்பவர் அவருடைய எலுமிச்சை தோட்டத்திலும் உடலில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்தனர்.

சடலத்தை மீட்ட போலீஸார்

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கடமலைக்குண்டு போலீஸாரும், கண்டமனூர் வனச்சரக அதிகாரிகளும் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் இறந்த இருவரின் உடலில் இருந்த காயங்களை வைத்து இருவரையும் கரடி தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இறந்த விவசாயிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னரே இருவரின் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும். இதற்கிடையே இறந்து போன விவசாயிகளின் உறவினர்கள் இறந்தவர்களின் சாவில் மர்மம் உள்ளதாக போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். கடமலைக்குண்டு வருஷநாடு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகளின் தாக்குதல் அதிகரித்து உள்ளதால், பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

கரடி

இது குறித்து வனத்துறையிடம் விசாரித்தோம். ``நேற்று இரவு வருஷநாடு பகுதியில் சாரல் மழை பெய்தது. மணிகண்டன், கருப்பையா இருவரும் அவரவர் தோட்டங்களில் பறித்த எலுமிச்சை பழங்களை மூடை கட்டி எடுத்துவரும் பணி செய்துள்ளனர். அப்போது மறைந்திருந்த கரடி திடீரென கருப்பையா மீது பாய்ந்து தாக்கியதாக கூறுகிறார்கள். காயங்களை வைத்து பார்க்கும்போது கூரிய நகங்கள் கொண்ட வனவிலங்குகள் தாக்கியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டுமே உறுதியாக கூறமுடியும்" என்றனர்.

`டிரஸ் போட மாட்டேன்’ - போலீஸ்காரரின் நிர்வாண அட்டூழியம்... வேலூரில் நடந்தது என்ன?

வேலூர் மாவட்டம், காட்பாடியில் இருந்து குடியாத்தம் நோக்கி தனியார் ஷு கம்பெனி வேன் ஒன்று... நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தது.கே.வி.குப்பம் அருகிலுள்ள நீலகண்டபாளையம் பகுதியைச் சேர்ந்த சேட்டு என... மேலும் பார்க்க

Bengaluru : பாலியல் புகார் அளிக்க வந்த சிறுமி - காவலரால் மீண்டும் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்

'வேலியே பயிரை மேய்ந்தாற் போல' என்ற பழமொழியை போன்ற சம்பவம் ஒன்று பெங்களூருவில் நடந்துள்ளது. பெங்களூருவை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் விக்கி என்பவர் நண்பரை போன்று பழகி, தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து... மேலும் பார்க்க

சென்னை: ஆன்லைன் ஆர்டர்; டெலிவரி பாய் செயலால் அதிர்ச்சியடைந்த பெண் - நடந்தது என்ன?

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் வசிக்கும் 54 வயதுடைய பெண் ஒருவர், அவரின் வீட்டில் குளித்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த பொருளை டெலிவரி செய்ய இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணின... மேலும் பார்க்க

திருவெண்ணைநல்லூர்: டிராக்டர் மீது மோதிய எக்ஸ்பிரஸ் ரயில்... பரபரப்பை ஏற்படுத்திய நபர்!

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூருக்கு உட்பட்டது ஆணைவாரி ரயில் போக்குவரத்து நிலையம். இங்கு ஆணைவாரி மற்றும் ஆத்திப்பட்டு ஆகிய கிராமங்களை இணைக்கும் ரயில்வே கேட் அமைந்துள்ளது. கடலூர் டு சித்தூர் சால... மேலும் பார்க்க

`கோடி கோடியாக சொத்து' சிக்கலில் குடும்பத்தினர்? - கோவை அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் ரெய்டு பின்னணி

கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் அம்மன் அர்ஜூனன். இவர் அதிமுகவில் கோவை மாநகர் மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் கடந்த 2016-2021 காலகட்டத்தில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். இந்நில... மேலும் பார்க்க

MP: "மணமான பெண்களைத் திருமண ஆசைகாட்டி பாலியல் உறவு வைப்பது..." - மத்தியப் பிரதேச நீதிமன்றம் அதிரடி

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகில் உள்ள சதர்பூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் வீரேந்திர யாதவ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தார். இருவரும் தனிமையில் மகிழ்ச்ச... மேலும் பார்க்க