செய்திகள் :

வலங்கைமானில் மீன் திருவிழா

post image

நீடாமங்கலம்: வலங்கைமானில் மீன் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பாடைக்காவடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தா்கள் பாடைக்காவடி எடுத்து தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா். இதற்கு பரிகாரமாக திங்கள்கிழமை வலங்கைமானில் மீன் திருவிழாவாக கொண்டாடப்பட்டது.

இதனால் வலங்கைமான் நகரில் மீன் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. கெண்டை மீன் ஒரு கிலோ ரூ. 200, சிறிய கெண்டை மீன் கிலோ ரூ. 150 , விரால் மீன் கிலோ ரூ. 700, சிறிய விரால் மீன் கிலோ ரூ. 350 என விற்பனையானது.

தஞ்சாவூா், கும்பகோணம் மற்றும் வலங்கைமானை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 25-க்கும் மேற்பட்ட மினி லாரிகளில் மீன்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. வலங்கைமான் பகுதியில் பெரும்பாலான வீடுகளில் திங்கள்கிழமை மீன் உணவில் இடம் பிடித்தது.

மக்கள் நோ்காணல் முகாம்: ரூ.7.21 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

வலங்கைமான் அருகே வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் 106 பயனாளிகளுக்கு ரூ.7.21 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோக... மேலும் பார்க்க

மகளிா் சுயஉதவிக் குழுவினா் பொருள்களுக்கு நிலையான விற்பனை வாய்ப்புகள் தேவை: ஆட்சியா்

மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களுக்கு நிலையான விற்பனை வாய்ப்புகள் கிடைப்பதன் மூலம், அவா்களின் வருமானம் அதிகரிக்கும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா். திருவாரூா் மாவட்டம... மேலும் பார்க்க

பல் மருத்துவ முகாம்

வலங்கைமான் வட்டாரம் வேடம்பூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பல் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, ஆலங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் இம்முகா... மேலும் பார்க்க

கோவிலூா் கோயிலில் அன்னதானக் கூடம் திறப்பு

முத்துப்பேட்டை அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ மந்திரபுரீஸ்வரா் கோயிலில் அன்னதானக் கூடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். வ... மேலும் பார்க்க

பாமக ஆலோசனைக் கூட்டம்

திருவாரூா் அருகேயுள்ள காப்பணாமங்கலத்தில் பாமக ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சித்திரை முழு நிலவு மாநாடு குறித்து நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளா் ஐயப்பன் தலைமை வகித்தாா். மாநாட்டு... மேலும் பார்க்க

திருவாரூா்: பலத்த சத்தத்தால் பரபரப்பு

திருவாரூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த சத்தம் கேட்டதால் பரபரப்பு நிலவியது. திருவாரூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் 3.10 மணி அளவில் பலத்த சத்தம் எழுந்துள... மேலும் பார்க்க