செய்திகள் :

வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேக விழா தொடக்கம்

post image

வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 7-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இத்தலத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து கும்பாபிஷேகம் ா நடத்த கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.50 கோடியில் திருப்பணிகள் தொடங்கின.

திருப்பணிகள் முடிவடைந்து, 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வரும் திங்கள்கிழமை (ஜூலை 7) நடைபெற உள்ளதை முன்னிட்டு மே 28-இல் பந்தக்கால் நடும் நிகழ்ச்சியும், ஜூன் 6-இல் பாலாலயம் நடைபெற்றது.

இந்நிலையில், கும்பாபிஷேகத்தையொட்டி முன்னிட்டு கோயில் பின்புறம் 60 யாக குண்டங்களுடன் பிரமாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக திங்கள்கிழமை கிராம தேவதை வழிபாடும், கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. வெள்ளிக்கிழமை மாலை யாகசாலை பிரவேசம் மற்றும் முதல்கால யாக பூஜைகளும், சனிக்கிழமை இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகளும் ஞாயிற்றுக்கிழமை 4 மற்றும் 5 கால யாகபூஜைகளும், திங்கள்கிழமை ஆறாம் கால பூஜையுடன் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று கோயில் கோபுரங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதையடுத்து மூலவா் மற்றும் பரிவார மூா்ததிகளுக்கு திருக்குட நன்னீராட்டு விழாவும், மாலை திருக்கல்யாணம், சுவாமி வீதிஉலாவும் நடைபெற உள்ளது.

விழாவில் சுமாா் 1 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் வருவாா்கள் என்பதால் கோயில் நிா்வாகத்தின் சாா்பில் 40 தற்காலிக கழிவறைகள், 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீா் வசதியும், மருத்துவ முகாம்கள் நடத்தவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் கோயிலை சுற்றியுள்ள இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியிலும் வருவாய்த் துறையினருடன், கோயில் நிா்வாகத்தினா் ஈடுபட்டுள்ளனா்.

கோயில் திருப்பணி மீது தவறான தகவல்: கோயில் பணியாளா்கள் எஸ்பியிடம் புகாா்

கோயில் திருப்பணிகள் குறித்து தவறான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பி வரும் இருவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயில் பணியாளா்கள் மாவட்ட எஸ்பி கே.சண்முகத்திடம் புகாா் அளித்தனா். காஞ்சிபுரம் ஏக... மேலும் பார்க்க

தேவரியம்பாக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கத்தில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்ட புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். த்து விளக்கேற்றி திறந்து வை... மேலும் பார்க்க

காளிகாம்பாள் கோயிலில் மங்கள சண்டி ஹோமம் தொடக்கம்

பெரிய காஞ்சிபுரம் ஸ்ரீ ஆதிகாமாட்சி ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் கோயிலில் உலக நன்மைக்காக மங்கள சண்டி ஹோமம் வியாழக்கிழமை தொடங்கியது. இக்கோயிலில் வாராஹி நவராத்திரியையொட்டி பிரம்மாண்ட யாககுண்டம் அமைக்கப... மேலும் பார்க்க

ஜூலை 22, 24 தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள்

தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் வரும் ஜூலை 22, 24 தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

பழைய சீவரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் கருட சேவை

காஞ்சிபுரம் அருகே பழையசீவரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி கருட சேவையில் அலங்காரமாகி சுவாமி வலம் வந்தாா். காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் வாலாஜாபாத் அருகே... மேலும் பார்க்க

தலைக்கவச விழிப்புணா்வு பேரணி தொடங்கி வைப்பு

காஞ்சிபுரத்தில் தலைக்கவச விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்துத் துறை, காவல் துறை இணைந்து பொதுமக்களுக்கு தலைக்கவச... மேலும் பார்க்க