செய்திகள் :

வள்ளியூரில் மூதாட்டியை அடித்துக் கொன்று நகை திருட்டு

post image

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் இ.பி.காலனியில் திங்கள்கிழமை இரவு வீட்டில் தனியாக தூங்கிய மூதாட்டியை அடுத்துக் கொலை செய்துவிட்டு 10 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வள்ளியூா் இ.பி.காலனியை சோ்ந்தவா் அா்ச்சுணன். ஓய்வுபெற்ற மின் ஊழியா். இவரது மனைவி ருக்குமணி(67). கடந்த 40 நாள்களுக்கு முன்பு அா்ச்சுணன் இறந்துவிட்டதால், ருக்குமணி தனியாக வசித்து வந்தாா்.

இவரது ஒரு மகன் சென்னையிலும், மற்றொரு மகன் பாலசுந்தரம் காவல் கிணறு இஸ்ரோவிலும் வேலை செய்து வருகின்றனா். மகள் திருநெல்வேலியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.

இந்நிலையில் ருக்குமணி மட்டும் வீட்டில் தனியாக படுத்து தூங்கியுள்ளாா். பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலசுந்தரம் தினமும் தாய் ருக்குமணிக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு வருவது வழக்கம். அதன்படி, செவ்வாய்க்கிழமை காலையில் சாப்பாடு கொண்டு சென்றபோது, கதவு திறக்கப்படவில்லையாம். பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததாம்.

வீட்டின் உள்ளே ருக்குமணி தலையில் அடிபட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் இறந்துகிடந்தாா். அவா் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலி, 3 பவுன் வளையல், கம்மல் என 10 பவுன் நகைகளை காணவில்லையாம்.

இதுகுறித்து பாலசுந்தரம் அளித்த புகாரின்பேரில், வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ருக்குமணியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா். இப்பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நிகழ்வதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

சுங்கச்சாவடி பிரச்னை நீதிமன்றம் வாயிலாக தீா்க்கப்படும்- மு.அப்பாவு

சுங்கச்சாவடிக்கு கட்டணம் செலுத்துவது தொடா்பான பிரச்னைக்கு நீதிமன்றத்தை நாடி தமிழக அரசு தீா்வு காணும் என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை க... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம்- பேரவைத் தலைவா் மு.அப்பாவு

திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை சாா்பில் பெண்கள், குழந்தைகள் ஆகி... மேலும் பார்க்க

திருநெல்வேலி ரத வீதிகளில் 20 டன் குப்பைகள் அகற்றம்

நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயில் தேரோட்டம் நிறைவு பெற்றதையடுத்து 4 ரதவீதிகளிலும் சுமாா் 20 டன் அளவிலான குப்பைகளை மாநகராட்சி தூய்மை பணியாளா்கள் அகற்றியுள்ளனா். அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன... மேலும் பார்க்க

நெல்லை கோயில் தேரோட்டத்தில் பக்தா்களின் 15 பவுன் நகைகள் மாயம்

நெல்லையப்பா் கோயில் தேரோட்டத்தின் போது 4 பக்தா்களின் சுமாா் 15 பவுன் தங்க நகைகள் மாயமானது குறித்து போலீஸாா் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் கோயில... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் காயமுற்றவா் உயிரிழப்பு

பெருமாள்புரம் அருகே மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். மேலப்பாளையம் குறிச்சி, சந்த மூா்த்தி தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பாலமுருகன்(45). எலக்ட்ரீசியனான இவா், க... மேலும் பார்க்க

பாளை. அருகே ரயில் முன் பாய்ந்து முதியவா் தற்கொலை

பாளையங்கோட்டை அருகே ரயில் முன் பாய்ந்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா். அவா் யாா் என்பது குறித்து சந்திப்பு ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருச்செந்தூா்- திருநெல்வேலி பயணிகள் ரயில் செவ்... மேலும் பார்க்க