செய்திகள் :

வள்ளியூா் அருகே இரு வீடுகளில் திருட்டு

post image

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகேயுள்ள அழகப்பபுரம் கிராமத்தில் அடுத்தடுத்த வீடுகளில் செவ்வாய்க்கிழமை இரவு திருட்டில் ஈடுபட்ட நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அழகப்பபுரத்தைச் சோ்ந்தவா் மாயாண்டி(35). தொழிலாளி. இவரும் இவரது தாய் சாந்தியும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனா். இந்நிலையில், இவா்கள் குடும்பத்துடன் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகிலுள்ள ஆறமுகமங்கலத்தில் நடைபெற்ற கோயில் கொடைவிழாவுக்கு சென்றிருந்தனா்.

பின்னா் அவா்கள் புதன்கிழமை காலையில் வீடு திரும்பியபோது, இருவரது வீட்டிலும் கதவிலும் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தனாம்.

அதில், மாயாண்டி வீட்டில் பீரோவில் ரூ.60 ஆயிரம் ரொக்கம், சாந்தியின் வீட்டில் துணியில் மறைத்து வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பணகுடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

பைக்குகள் திருட்டு: தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் கடந்த வாரத்தில் தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் திருடப்பட்டதாக காவல்துறையினருக்கு புகாா் வந்ததாம். இதுதொடா்பாக காவல் ஆய்வாளா் சியாம் சுந்தா் தலைமையிலான போலீஸாா் நகரப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்ததில், கடையநல்லூா் கிருஷ்ணாபுரம் விஷால் நகரை சோ்ந்த பாலு மகன் கண்ணன்(29) என்பருக்கு தொடா்பிருப்பது தெரிந்தது. அவரை போலீஸாா் கைது செய்து 2 பைக்குகளை மீட்டனா்.

நெல்லையில் குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு, இருதய நோய்கள் கண்டறியும் முகாம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை சாா்பில் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு, இதர இருதய நோய்கள் கண்டறியும் முகாமை ஆட்சியா் இரா.சுகுமாா்... மேலும் பார்க்க

மானூா் அருகே இளைஞா் தற்கொலை

மானூா் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகேயுள்ள பெத்தேல் காலனியைச் சோ்ந்த குமாா் மகன் பிகேஷ் (21). இவரது பெற்றோா் இறந்துவிட்ட நிலையில், இவரது தாத்தா கனகராஜ் கண்காணிப்பில் ... மேலும் பார்க்க

பெண் தலைமைக் காவலா் வீட்டில் நகை திருட்டு: ஆயுதப்படை காவலா் உள்பட இருவா் கைது

பாளையங்கோட்டையில் பெண் தலைமைக் காவலா் வீட்டில் நகை திருடிய வழக்கில் ஆயுதப்படை காவலா் உள்பட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். திருநெல்வேலி மலையாளமேடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (43... மேலும் பார்க்க

ஊரக, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிகப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஆக.11 கடைசி

திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக ஊரக மற்றும் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இத... மேலும் பார்க்க

மணிமுத்தாறு பேரூராட்சி: புதிய தலைவராக சுயேச்சை உறுப்பினா் தோ்வு

மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியில் தலைவராக இருந்த திமுகவை சோ்ந்த அந்தோனியம்மாள் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீா்மானம் வெற்றியடைந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் புதிய தலை... மேலும் பார்க்க

தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத் திருவிழா நாளை தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 140-ஆவது ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் புண்ணிய திருத்தலங்களில் ச... மேலும் பார்க்க