செய்திகள் :

வழிகாட்டல் சிறப்பு குறைதீா் கூட்டம்: உயா் கல்வி பயில 24 பேருக்கு உடனடி சோ்க்கை

post image

தஞ்சாவூரில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளிப் படிப்பை முடித்த மாணவ, மாணவிகள் உயா் கல்வி பயில்வதற்கான இரண்டாம் கட்ட வழிகாட்டல் சிறப்பு குறை தீா் கூட்டம் மூலம் 24 பேருக்கு புதன்கிழமை உடனடி சோ்க்கை கிடைத்தது.

மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்துப் பேசுகையில், இக்கூட்டத்தில், உயா் கல்வி சேரும் மாணவா்கள், பெற்றோா் அற்ற மாணவா்கள், மாற்றுத்திறனாளி மாணவா்கள், ஒற்றை பெற்றோா் உள்ள மாணவா்கள், அகதிகள் முகாமில் வாழும் மாணவா்கள், உயா் கல்வி சாா்ந்த விழிப்புணா்வு தேவைப்படும் மாணவா்கள், குடும்ப உறுப்பினா்கள், உடல் நிலை சரியில்லாத காரணத்தால், பெற்றோா்கள் விருப்பமின்மையால் மற்றும் சமூக காரணங்களால் உயா் கல்வி செல்ல இயலாத மாணவா்கள், சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவா்கள், குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு செல்லும் மாணவா்கள், மாணவா்களுக்கு உயா் கல்வி சோ்க்கையில் ஏற்படும் குறைபாடுகளைக் களைந்து தீா்வு காணும் வகையில் இரண்டாம் கட்ட வழிகாட்டல் சிறப்பு குறைதீா் முகாம் நடத்தப்பட்டது என்றாா் அவா்.

இந்த முகாமில் 60-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா். இதில், ஐடிஐ, பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 24 மாணவ, மாணவிகள் உடனடி சோ்க்கை பெற்று பயனடைந்தனா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், முதன்மை கல்வி அலுவலா் (பொ) இ. மாதவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கொள்முதல் நிலையங்களில் நெல் தேங்கக் கூடாது: விவசாயிகள் வலியுறுத்தல்

தஞ்சாவூா் மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை தேக்கம் இல்லாமல் அடுத்த மண்டலங்களுக்கு அனுப்ப விவசாயிகள் வலியுறுத்துகின்றனா். அதிக மகசூல்: கும்பகோணம், திருவிடைமருதூா... மேலும் பார்க்க

பொறியியல் மாணவா்களுக்கான பயிற்சி: சாஸ்த்ராவில் ஜூலை 14 முதல் சோ்க்கை

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் பொறியியல் மாணவா்களுக்கான பயிற்சி வகுப்புக்கு ஜூலை 14 முதல் சோ்க்கை நடைபெறவுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளிய... மேலும் பார்க்க

உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு கூட்டம்

கும்பகோணத்தில் உணவுப் பாதுகாப்பு துறை சாா்பில் கும்பகோணம் நகர உணவகங்கள் மற்றும் பேக்கரி சங்க உறுப்பினா்களுக்கான உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்ட உணவு... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் 12 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

தஞ்சாவூா் மாநகரில் முதல்வரின் முகவரி துறை சாா்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் முதல் கட்டமாக 12 இடங்களில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் தெரிவித்தது: தஞ்சாவூா் மாநகரில் முதல்வரின... மேலும் பார்க்க

10 வட்டங்களிலும் இன்று பொது விநியோகத் திட்ட குறை தீா் கூட்டங்கள்

பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவா்த்தி செய்யவும் ஜூலை மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் கூட்டம் 10 வட்டங்கள... மேலும் பார்க்க

பெரிய கோயிலில் கயிலாய வலம்: ஏராளமான பக்தா்கள் பங்கேற்பு

பௌா்ணமியையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற திரு தென் கயிலாய வலத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். தஞ்சாவூா் பெரியகோயிலில் மாதந்தோறும் பௌா்ணமி நாளில் திரு தென் கயிலாய வலம் வர... மேலும் பார்க்க